Monday, December 31, 2012

மதுரை ஆதினம் சொன்னதில் என்ன தப்பு இருக்கு???

மதுரை: தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. 

அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் அவர்.
-நேற்றைய செய்தி.

தமிழ்நாட்டுல ஒரே ஒரு மனுஷன் தைரியமா அரைகுறை டிரஸ் போடாதீங்கன்னு சொல்லி இருக்கார்...அது கூட பொறுக்காம
சில பெண்கள் சங்கங்களும் போராட்டம் நடத்துனாங்களாம்....

இதென்ன கொடுமையா இருக்கு....அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு..
பெண்கள் சங்கமோ,கம்யூனிஸ்ட்டுகளோ போராட்டம் செய்வதால்
அது ஒட்டு மொத்த மக்களின் குரலாகிவிடாது....

துப்பட்டா,தாவணின்னு ஒரு டிரஸ் அயிட்டம் தமிழ்நாட்டில் இருந்துச்சு...
அந்த ஆடை இனம் அழிந்து கொண்டு வரும் ஆடைகளின் பட்டியலில் முதலிடத்தில் தற்போது உள்ளது....

கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா அந்த துப்பட்டா சின்னதாக ஆகி
இப்போ இப்போ   கழுத்தை சுற்றி போடும் டை  மாதிரி இருக்கு.

இன்னும் சில காலங்களில் தாவணி,துப்பட்டா எல்லாம்
இட்ஸ்கான்,போயே போச்சு,அவட் ஆஃப் ஃபேஷன்
ஜவுளிக்கடையிலலாம் சொல்வாங்க போல....

அப்புறம் பாரத தேசத்தில் வாழ்ந்த மக்களின் ஆடையில் இதுவும்
ஒன்றுனு தொல்பொருள் ஆராய்ச்சில கண்டுபிடிக்கிற நிலைமைல
பெண்களின் ஆடை இருக்குறது கவலைப்படும் விசயம்.

தமிழ்நாட்டில் இன்னும் ஒவ்வொரு தாய்,தந்தையும்
அதைத்தான் தன் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...

சிட்டி வாழ்க்கையில் பொழுதன்னைக்கும்
அரை குறை ஆடைப்பெண்களை பார்த்து பலருக்கு
சலிப்பாய் தோன்றலாம்....ஆனால்,இன்னும் கிராமத்து மக்கள்
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும்போது காறி துப்பி
விட்டுத்தான் செல்கிறார்கள்...

கிராமத்தில் இருந்து நகரங்களில் படிக்க வரும் இளைஞர்கள்
துப்பட்டான்னு ஒண்ணு விக்குதே...அதை வாங்கி போட்டாதான்
என்னனு கேள்வி கேட்குறாங்க....

பெண்கள் வைரம் மாதிரி....மூடி மறைத்து வைப்பதுதான் நல்லது...
கூழாங்கல் மாதிரி தெருவில் கிடந்தால் ஆபத்துதான்....

இந்த ஆர்ப்பாட்டங்களையோ,போராட்டங்களையோ பார்ப்பவர்களிலும்,கேட்பவர்களிலும்,படிப்பவர்களிலும் பெரும்பாலான மக்கள் கண்டிப்பாக தன் பெண் பிள்ளைகளுக்கோ,மனைவிக்கோ அரைகுறை ஆடை அணிந்து வருவதை விரும்பாத பண்பாடு உடையவர்களாத்தான் இருப்பார்கள்.....இன்னும் கலாச்சாரமும்,பண்பாடும் கிராமங்களில் இருந்து
கொண்டுதான் இருக்கிறது.....

பெண்கள் சங்கத்தினர் உண்மையில் போராட்டம் நடத்தவேண்டியது
சினிமாவில்  துகிலுரித்துக்காட்டும் பெண்ணினத்தை கேவலப்படுத்தும் பெண்களை எதிர்த்துதான்....ஆதினத்தை எதிர்த்து அல்ல....

7 comments:

  1. பெண்கள் வைரம் மாதிரி....மூடி மறைத்து வைப்பதுதான் நல்லது...
    கூழாங்கல் மாதிரி தெருவில் கிடந்தால் ஆபத்துதான்..../////////ம்ம்ம் அருமை

    ReplyDelete
  2. நல்ல பதிவு சகோ ஆஷா...

    சூட்டோட சூடா பதிவு போட்டுட்டீங்க..குட்..

    ReplyDelete
  3. கற்பழிப்பை தடுக்க முடியாது!

    31 டிசம்பர், 2012

    அன்மையில் தலை நகர் டெல்லியில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்போது இறந்த செய்தி இன்று நட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.

    மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் பெரும் தலைவலி ஏற்படும் அளவிற்கு போராட்டங்கள் தினம் தினம் தொடர்கின்றன.

    இக்குற்ற செயலுக்காக சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தலைவர்களால் பேசப்படுகிறது.

    இது போன்ற குற்றம் இனி நடைபெறக்கூடாது என்று நீதிமான்களும் பேசிவருகின்றனர்.

    ஆனால் இந்திய அரசால் இக்குற்றத்தை முற்றிலும் அல்ல ஓரளவிற்கு கூட தடுத்துவிடமுடியாது. ஆம் இந்தியாவில் நிலை அந்தளவிற்கு மோசமாக உள்ளது.

    இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள் கற்பழிக்கப்படுகிறாள்.

    இந்த கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள்: நாட்டை பாதுகாக்கும் இராணுவம், நாட்டு மக்களை பாதுகாக்கும் காவல்துறை, நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிபர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பெண்ணின் தந்தை மேலும் அதிகாரமற்றவர்களில் சிலர் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

    சில நடுநிலையாளர்கள் அரபு நாடுகளைப் போல் இக்குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூறுவதுண்டு.

    அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் பொழுது எப்படி குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பார்கள்?

    ஒரு கால் கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு என்று சிறப்பு படை அமைத்தால் ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினர் உட்பட பல கிரிமினல்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டியது வரும்.

    நம் நாட்டில் நடக்காத ஒரு சமூக கொடுமை நடந்துவிட்டது போல் டெல்லியில் பரபரப்பாக்கப்பட்டு வருகிறது.

    காரணம் கற்பழிக்கப்பட்டது மருத்துவம் படிக்கும் ஒரு உயர் ஜாதிவகுப்பை சார்ந்த இளம் பெண்.

    அனுதினமும் கஷ்மீரில் பெண்கள், இளம் பெண்கள், சிறுமிகள் என்று கையில் அகப்படும் பெண்களின் கற்பை சூரையாடுவது என்பது கஷ்மீர் ஆப்பிள் சாப்பிடுவது போல் என்று வர்ணிக்கும் இந்திய இராணுவத்தை கண்டித்து இது போல் போராட்டம் நடத்த அனுமதித்தது உண்டா?

    குஜராத்தில் காப்பாற்றுங்கள் என்று காவல் துறையினரை பார்த்து கெஞ்சிய நமது சகோதரிகளின் கையை பிடித்து சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளிடம் ஒப்படைத்த காவல்துறையினரை தண்டிப்பது போன்ற செய்திகளை தீர்ப்புகளாக, மின் ஊடகங்கள் தற்போது செய்தியை பரப்புவதுபோல் பரப்பியதுண்டா?

    அல்லது கற்பழிப்பிற்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பேசிய தமிழக முதல்வர் மதுரை புறநகரில் காவல்துறையால் காவல் நிலையத்தில் வைத்து கணவனை கட்டிப்போட்டு தலித் பெண்ணை கற்பழித்த காக்கி உடையில் இன்று பணியாற்றி வரும் ஓநாய்களைத் தண்டித்தீர்களா?

    இல்லை. காரணம் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்.


    உண்மையில் இந்திய நாட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் காந்தியடிகள் கூறியது போல் உமர் (ரழி) ஆட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்பதை அமுல்படுத்த வேண்டும்.

    குறைந்த பட்சம் அரபுலகை போல் தண்டிக்க வேண்டும். பெண்களும் தங்களின் கவர்ச்சிகலை மறைக்க வேண்டும். இது தான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

    THANKS TO:http://chennaipopularfront.blogspot.in/2012/12/blog-post_2751.html

    ReplyDelete
  4. அப்படி போடு

    ReplyDelete
  5. குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

    முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.

    இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

    சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

    http://www.thoothuonline.com

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது