Wednesday, December 19, 2012

சுஷ்மா சுவராஜூக்கு ஒரு கேள்வி....

டெல்லி: டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார். ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அவையே உருக்கமான சூழ்நிலைக்கு மாறியது.


                                                      
கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன் ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா. இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். 


இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வருமே...ஆறாத வடுவாக அது கூடவே இருக்குமே... மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அழுதார் ஜெயா. பின்னர் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். 

அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானமாகும். இந்த உலகுக்கு உங்களைக் கொண்டு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா.. அவர்களுக்கு பாதுகாப்பே கிடையாதா... என்றார் ஆவேசமாக.

-நேற்றைய செய்தி...

ஆஹா...ஓஹோ...பேஷ்...பேஷ்...
வாங்கம்மா...வாங்க...வாங்க...ஜெயா பச்சன்...
கலைத்துறையை சேர்ந்த நீங்கள் ஒரு அப்பாவி 
பெண்ணுக்காக கண்ணீர் வடித்துள்ளீர்கள்...
அடிப்படையில் கலைத்துறையை சேர்ந்த நீங்கள் 
வருத்தப்படுவது நிறைய ஆச்சரியத்தை தருகிறது...
சினிமா மக்களிடையே பரவலான பின் தான் இந்த கோரங்களும்,சம்பவங்களும் அதிகரித்துள்ளது....

ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்கள் தந்தையாலும்,சகோதரராலும்,உறவினராலும் 
மானபங்கப்படுத்துவதை எண்ணி வேதனைப்பட்டீர்களே....
24 மணிநேரமும் பெண்களை போகப்பொருளாக காட்டி  
சதை வியாபாரிகளாக சித்தரிக்கும்  கலைத்துறையும் 
இதற்கு முழு முக்கிய ஒரு காரணமென்று தெரியுமா...???

மனிதர்களின் மூளைகளிலும்,எண்ணங்களிலும்
ஆபாசத்தையும்,வக்கிர எண்ணங்களையும் 
வலுக்கட்டாயமாக விதைப்பதில் தாங்கள் இருக்கும் 
கலைத்துறையும் ஒரு காரணமென்று தெரியுமா...????

சிகரெட்டையும்,மதுபானத்தையும் ஹீரோயிஷமாக நினைத்து
தன் உடலையும்,மனதையும்,குடும்பத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி நடுத்தெருவில் விட்ட ஒவ்வொரு குடிமகனுடைய குடும்பத்தாரின் பாவத்திலும்,வயிற்றெரிச்சலிலும் உங்களில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு தெரியுமா...???

பருவத்தில் மட்டுமே வரவேண்டிய எண்ணங்களை
ஆறு,ஏழு வயது பிள்ளைகளிடம் விதைத்து
அவர்களின் அறிவுக்கண்ணை குருடாக்கி
ஆபாசக்கண்ணை திறந்து வைத்ததில் 
பங்கு உங்களில் ஒவ்வொருவருக்கும் உண்டு தெரியுமா...?

உங்களுக்கு அழுகை வரவேண்டும் என்றால் உங்க மருமகள் தங்களுடைய கணவருடன் மேடையில் ஒன்றாக நடனம் 
ஆடியபோது கலாச்சாரமீறலாக இருக்கிறதே என்று கண்ணீர் சிந்தி அழுதிருக்க வேண்டும்....இதே அழுகை குஜராத்தில் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே கூண்டோடு அழித்தபோது தங்களுக்கு வந்ததா..???

அடுத்து சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு ஒரு கேள்வி....
ஆம்...பலாத்காரம் செய்த அந்த கயவர்களுக்கு தூக்கு 
தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசினீர்களாம்...
வெரி குட்....வெரி குட்....தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்....!!!!

அப்படியே குஜராத்தில் உள்ள நரபலி கயவர்களுக்கும்
தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என சொல்லுங்களேன்...
தங்களுக்கு மனசாட்சி இருந்தால்....
நீதி எல்லாத்துக்கும் ஒண்ணா இருக்கணும்....
அது குஜராத்தா இருந்தா என்ன?டெல்லியா இருந்தா என்ன?

அப்புறம் கலைத்துறையில் உள்ளவர்களை 
பதவியில் உட்காரவைக்கும் பல அரசியல்கட்சிகளில்
 மிகப்பெரும் அரசியல் கட்சியின் தலைவியான
நீங்கள்அரை நிர்வாணமாக ஆடித்திரிவதால்
 பிரபலமானவர்களைதேர்தலில் நிற்க வைப்பதன் 
மூலமும்,பிரச்சாரம் செய்ய வைப்பதின் மூலமும் 
நீங்க ஓட்டு வேணும்னால் வாங்கலாம்...
சமுதாயத்தில் என்ன முன்னேற்றத்தையும் கொண்டு 
வரமுடியாது....

பத்மஸ்ரீ,பத்மபூஷன் விருதுகளை எல்லாம் 
கலைத்துறைக்கு கொடுக்குறீங்களே....
அவங்க என்ன கலைச்சேவை செஞ்சாங்க....
கலைத்துறையாம்....கட்டவிளக்குமாத்து துறையாம்....
அதுக்கு விருது ஒன்னு கேடா...????

சினிமாவில்  பிராக்டிகல் கிளாஸ் எடுக்கிறாங்க.....
அதுதான் நாட்டுல நடக்குது....
ஒரு பத்து வருஷத்துக்கு சினிமாவை தடை பண்ணுங்களேன்....
இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் நடக்காது.....

சினிமாவை தடை செய்தால் பெண்கள் அரைகுறை 
ஆடை அணிவது குறையும்....
பொது இடத்தில் பெண்களைமானபங்கப்படுத்துவது 
போன்ற சம்பவங்கள் குறையும்...
பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் குறையும்...

மக்கள் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவார்கள்....
அதிகாலையில் எழுந்தால் நோய்கள் ஓடிப்போகும்....
மக்களின் பணம் சினிமாவுக்கு போகாமல் மிச்சமாகும்....
சீக்கிரமே நாடு முன்னேறிடும்...
அப்புறம் அமெரிக்கா நம்மிடம் வந்து கடன் 
கேட்கும் நிலை கூட உருவாகலாம்....

25 comments:

  1. உங்களுக்கு காமெடி செமையா வருது...ஆனா நீங்க பண்ணுற காமெடி எரிச்சல் வர மாதிரி இருக்கு. சிரிக்கிற மாதிரி காமெடி பண்ணுங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு காமெடி கமென்ட் செமையா வருது... ஆனா நீங்க பண்ற கமென்ட் காமெடி எரிச்சல் தர மாதிரி இருக்கு!!!.... ரசிக்கிற மாதிரி கமென்ன்ட் பண்ண்ங்க சகோ...

      ஆதி தி பெஸ்ட்!!

      Delete
  2. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் போது சினிமாகாரர்கள் எதையும் கூறக்கூடாது என்கிறீர்களா? இல்லை சினிமாகாரர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கவே கூடாது என்கிறீகளா?
    உங்கள் வாதம் என்ன? என்பது தெரியவில்லை சகோதரி

    ReplyDelete
    Replies
    1. இதே போன்ற பிரச்சினைகள் இனியும் நடக்கக்கூடாது என்றால்
      தலையை விட்டு விட்டு வாலைப்பிடிப்பது போன்று சமூகத்தீமைகளின் ஆணி வேரையும் அதற்கு காரணமானவர்களையும் முற்றிலும் தடை செய்வதே மிக மிக அவசியம் ஆகும்....

      சிகரெட் பாக்கெட்டில் புகை உடலுக்கு கேடு என்று அச்சிடுவார்களே அது போல கலை,கலாச்சாரம் என்ற பெயரில் எங்கெங்கும் ஆபாசத்தை விதைக்கும் ஒரு துறை(கொடுமை)யை சேர்ந்த ஒரு பெண் ஓழமிடுவது ஆச்சரியம் என்று கூறினேன் சகோதரரே...

      Delete
  3. .இந்த விவகாரத்தில் போலீஸ்துறையைக் குற்றம் சொல்றாங்க ஷீலா தீக்ஷித்..இப்டி ஒருத்தரையொருத்தர் குற்றம் சொல்றவங்க இருக்கிறவரைக்கும் நம் நாட்டில் வெறியர்களுக்குப் பஞ்சமில்லை.:((

    கலைத்துறையில் இவங்க செய்ற அந்த பாவத்தையெல்லாம் போகுறதுக்குத்தானோ என்னவோ அங்கயிங்க ட்ரஸ்ட் எல்லாம் வச்சு புண்ணியம் தேடிக்கிறாங்க...? இந்த பதிவுக்கும் மைனஸ் ஓட்டா...அவ்வ்வ்வ்...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சகோதரி

      Delete
  4. எங்கே உங்க‌ள‌து ஆவேச‌க்குர‌ல்க‌ள். ???

    நிச்ச‌ய‌மாக‌ குர‌ல் எழாது. !


    டெல்லியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மிகவும் கொடூரமான குற்றம்.

    அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும்.

    அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் ஆவேச குரல்கள்

    இஸ்லாமிய‌ சமூக‌ப் பெண்க‌ள் ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் போன்ற வெறி நாய் இந்துத்வா ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால் குஜராத்தில் கற்பழித்து கொல்லப்பட்டு

    தெஹல்காவில் ஒவ்வொரு முஸ்லிம்களையும் எவ்வாறு கற்பழித்தோம் எப்படி கொன்றோம் என ஆர்.எஸ்.எஸ், வி .ஹெச்.பி , பஜ்ரங்தள் வெறி நாய்கள் பேட்டி கொடுத்து அகில‌ இந்தியா முழுதும் ப‌றை சாற்ற‌ப்படிருந்தும்

    ஆவேச‌க்குர‌ல்க‌ள் எந்த‌ மூலையில் ஓடி ஒளிந்து அழிந்து போய் விட்ட‌து.

    சாம்னாவில் ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல், மாஃபியா கும்பலின் தலைவன் பால் தாக்கரே அச்செயல்கள் (கற்பழிப்பு, கொலை) தேசப் பக்தியின் வெளிப்பாடு என எழுதும்போது அதனை மௌனமாக ஆதரித்துக்கொண்டிருந்தார்க‌ளே.

    ஒரு முஸ்லீம் பெண்னுக்கு நாட்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான ஆவேச‌க்குர‌ல்க‌ள் எழுந்திருக்குமா ?

    ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா?

    நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது.


    புதுடெல்லி: 12/12/2012 ல் டெல்லி மெஹ்ராலியில் முஸ்லீம்களின் வக்ஃப் போர்டுக்கு சொந்த‌மான‌ இட‌த்தில் நானூறு ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜிதும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்நூறுக்கும் அதிகமான சாதாரண முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளை கடுமையான குளிர்காலத்தில் காட்டு மிராண்டித்தனமாக இடித்து தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தின்(டி.டி.ஏ) அட்டூழியத்தால்

    நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..

    ஊட‌க‌ங‌க‌ள் இச்செய்தியை இருட்ட‌டிப்பு செய்து விட்டார்க‌ளே.

    எங்கே உங்க‌ள‌து ஆவேச‌க்குர‌ல்க‌ள்.

    நிச்ச‌ய‌மாக‌ குர‌ல் எழாது.

    ReplyDelete
  5. வண்க்கம் சகோ ஆஷா பர்வீன்,
    திருமதி ஜெயா பச்சன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தன் கடமையை செய்து இருக்கிறார். நம சட்டம் பாரபட்சமின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் இல்லை.

    120 கோடி மக்கள் தொகை, பொருளாத சிக்கல் கொண்ட நாட்டில் இப்படி இருப்பதும், பல் மாற்றங்கள் தேவைப்படுவதும் உண்மைதான்.
    ஆனால் அதை விட்டு எதையும் மதம் சார்ந்தே பார்ப்பது வழக்கமாகி விட்டதற்கு கடும் கண்டனம்.
    //நீங்கள்அரை நிர்வாணமாக ஆடித்திரிவதால்
    பிரபலமானவர்களைதேர்தலில் நிற்க வைப்பதன் //

    உங்களுக்கு திரைப்படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள். அதை விட்டு என்னவோ திரைப்படமே அனைத்துக்கும் காரணம் என்பது தவறு!!

    திருமதி ஜெயா பச்சன் தனிப்பட்ட முறையில் தக்குவதற்கு கண்டனர்.

    ஐஸ்வர்யா ராய் தனது மாமனாரோடு ஆடியது குற்ற‌ம் எனில் வேண்டாம்

    மாமா மருமகள் உறவு எப்படி மாறியது என எ.கா தர முடியும்!!

    ஏன் ________ அப்படி செய்தார் என விள்க்கம் கொடுப்பது யார்??

    கண்ணாடி வீட்டில் உள்ளே இருந்து கல் எரியாதீர்கள்!!


    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர்.சார்வாகன் அவர்களுக்கு...
      இப்பதிவில் நான் மதத்தை பற்றி சொல்லவே இல்லையே....
      அப்புறம் இன்னொன்று...நான் பின்பற்றுவது மதம் அல்ல...மார்க்கம்...









      //நீதியதி மார்க்கண்டேய கட்ஜூ

      சம்பவம் குறித்து மார்கண்டேய கட்ஜூ கூறுகையில், "டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்திற்காக, பார்லிமென்ட்டிலும், நாட்டிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், கண்டனக்குரல்கள், இதே விஷயம் இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் நடக்கும் போது ஏன் எழுப்பப்படுவதில்லை. டில்லி மட்டுமே இந்தியா அல்லவே.

      விதர்பா, ஆந்திரா ஆகிய இடங்களில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையில் நாடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நான் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தவில்லை. இந்திய தண்டனை சட்டம் 376ன் படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஏன் மரண தண்டனை வேண்டும் என கேட்கிறார்கள் என்பது எனக்கு புரிய வில்லை. அதே நேரத்தில் இது மட்டுமே நாட்டின் பிரச்னை அல்ல. இந்தியாவில் அனைத்து பிரச்னைகளுக்கு ஒரே சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எவ்வளவோ பேர் நாட்டில் உள்ளார்கள். விலைவாசி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கும் இதே போன்ற முக்கியத்துவத்தை அளித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட வேண்டும்" என தெரிவித்தார்.//

      அஸ்ஸாமில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை இந்த காணொளி விவரிக்கிறது. இவ்வளவு தெளிவாக ஆதாரம் கிடைத்தும் சம்பந்தப்பட்ட குண்டர்களை இந்த அரசு என்ன செய்திருக்கும்? இந்த அளவு பத்திரிக்கைகள் அந்த செய்தியை பிரபல்யப்படுத்தியிருக்குமா என்பது கேள்விக் குறியே? இது போன்று இரு அளவு கோல்களை நாம் கடைபிடிப்பது சமூகத்தில் முதலில் மாற வேண்டும்...//

      http://suvanappiriyan.blogspot.in/2012/12/blog-post_19.html

      Delete
    2. //ஆனால் அதை விட்டு எதையும் மதம் சார்ந்தே பார்ப்பது வழக்கமாகி விட்டதற்கு கடும் கண்டனம்.//

      ஒரு முஸ்லீம் நிம்மதியா பதிவு எழுத முடியல.. ஆனா ஊனான்னா கண்ண மூடிக்கிட்டு மதப்பதிவுன்னு சொல்லிட்டு வந்துடுறது!!!

      //உங்களுக்கு திரைப்படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள். அதை விட்டு என்னவோ திரைப்படமே அனைத்துக்கும் காரணம் என்பது தவறு!!//

      உங்களுக்கு பதிவு பிடிக்கலைன்னா படிக்காதீங்க.. அத விட்டுட்டு கமென்ட் போடுவதெல்லாம் தவறுன்னு நீங்க சொன்ன மாதிரியே இதுக்கு நான் பதில் சொன்னா என்னை வடிகட்டிய முட்டாள்ன்னு மக்கள்ஸ் நெனைப்பாங்க! :-))) கவனமா இருந்துக்கோங்க சாரே!


      //திருமதி ஜெயா பச்சன் தனிப்பட்ட முறையில் தக்குவதற்கு கண்டனர்.//

      திருமதி. ஆஷா அமீர்ரை பொதுவில் தாக்கியதற்கு என் கண்டங்கள் ஹா..ஹா..ஹா..
      மாயன் காலண்டரை விட இந்த வரி செம ஜோக்கா இருக்கு :-))

      //
      மாமா மருமகள் உறவு எப்படி மாறியது என எ.கா தர முடியும்!!//
      நான் உங்களை அண்ணன்னு சொன்னா நீங்க எனக்கு கூட பொறந்த அண்ணனாகிடுவீங்களா??? அப்ப உங்க சொத்தெல்லாம் எனக்கு தானா? ஹா..ஹா..ஹா...

      //ஏன் ________ அப்படி செய்தார் என விள்க்கம் கொடுப்பது யார்??//
      என்னமோ யாரும் இதுவரைக்கும் வெளக்கம் கொடுக்காத மாதிரியே பேசிட்டிருக்கீங்க! காமெடி பண்ணாதீங்க சகோ!!!

      //கண்ணாடி வீட்டில் உள்ளே இருந்து கல் எரியாதீர்கள்!!//
      மல்லாக்கா படுத்துக்கிட்டு எச்சில் துப்பாதீர்கள்...



      Delete
    3. திருமதி. ஆஷா அமீர்ரை பொதுவில் தாக்கியதற்கு என் கண்டங்கள் ஹா..ஹா..ஹா..///நன்றி ஆமினா...
      வரிக்கு வரி விளக்கம் கொடுத்ததற்கு மிக்க சந்தோஷம்

      Delete
  6. அம்மா !ஜெயா பச்சன் அவர்கள் இது வரை ஆபாசமாக நடித்து நான் பார்த்தது இல்லை மேலும் திரை உலகத்தினர் கருத்து தெரிவிக்க கூடாது என்பது என்ன நியாயம்அவர்கள் என்னதீண்டததவர்களா மேலும் அவர்கள் மாமனும் மருமகளும் நடனம் ஆடினால் அதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இருக்கிறது அதை கொச்சைபடுத்தாதீர்கள் உலகத்திலேயே அதிகமான கொலையும் கற்பழிப்பும் செய்தவன் செங்கிஸ்கான் அவன் எந்த சினிமா பார்த்து அப்படி செய்தான் குஜராத்தில் இந்து வெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தை வெளிகொனர்தது ஒரு இந்தி சினிமா டைரக்டர் தான் குதிரைக்கு சோணம் கட்டினால் போன்ற பார்வையை கை விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மாமனும்,மருமகளும் சேர்ந்து ஆடுவதற்கு முதிர்ச்சி என ஒன்று உள்ளதா...???!!!
      செங்கிஸ்கான் ஒருவன் மட்டுமே சினிமா பார்க்காமல் செய்தான் என்றால்....
      இத்தனை செங்கிஸ்கான்களை உருவாக்கியதற்கு காரணம் யார் என யோசித்துப்பாருங்கள்...

      Delete
  7. சாறு ,நீதித்துறையினர் என்றால் கேவலமா?
    தமிழச்சி
    https://plus.google.com/u/0/106341662855918746617/posts
    சாறு ,இந்த அம்மா கருத்தை படித்து ஒரு பதிவு எழுதுவீர்களா?
    தமிழச்சி --18:54 (edited) - Public
    செய்தி: //"இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆண் நண்பனுடன் ஊர் சுற்றிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்கவே அவளை வன்புணர்வு செய்தோம்" - மாணவியை தன் தம்பி மற்றும் இன்னும் மூவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்த டெல்லி பேருந்து ஓட்டுனர் ராம்சிங் வாக்குமூலம். //

    # ஆகா! இந்த வழக்கை விசாரித்துவிட்டு டெல்லி நீதிபதி, 'பெண்ணை குறித்து அக்கறை கொண்ட ராம்சிங் 'குற்றவாளி அல்ல', அவருடைய பொறுப்புணர்வை பாராட்டி விடுதலை செய்கிறேன்' என்று தீர்ப்பு கொடுத்தாலும் கொடுப்பான்.

    போன வாரம்தான் 'மனைவி அனுமதி இல்லாமல் கணவன் உடலுறவு கொள்வது தவறல்ல' என்று ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்திருந்தான்.

    ஏலேய்! ஆர்.எஸ்.எஸ் ஆளுங்களெல்லாம் எல்லா இடத்திலும் புந்துட்டீங்களேடா. பொம்பளைங்க பாடு இனி என்னாகுமோ?

    More photos from தமிழச்சி --

    ReplyDelete

    ReplyDelete
  8. //திருமதி ஜெயா பச்சனின் குடும்பத்தினர் மீதான உங்களின் ஆபாச விமர்சன‌த்திற்கு ஒரு தமிழனாய் தலை குனிகிறேன்.

    தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்.மன்னியுங்கள் தாயே!!

    இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!!////

    சாறு ,முஸ்லிம் பெண் என்றது இத்தனை ஆவேசம் வேண்டுமா?

    சகோதரி தமிழச்சியும் இந்த சம்பவம் பற்றி தனது கருத்துக்களை எழுதியிருக்கிறார் .அவரது

    கொள்கை அடிப்படையில் தமிழச்சி பேசுகிறார் .அதைப் போலவே ஆசா பர்வினும் அவரது

    சார்ந்த மத அடிப்படையில் பேசுகிறார் .இதில் உங்களுக்கு இத்தனை கோரமாகா ஆவேசம் வர

    வேண்டிய அவசியம் என்ன?

    ஜெயா பச்சன் என்ற பழைய சினிமாக்காரியிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் நீங்கள் அந்த

    மாணவிகளை பலாத்காரம் பண்ணிய அயோக்கியர்கள் இந்தியன் என்பதால் இந்தியர்கள்

    சார்பில் அந்த மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டீர்களா ?

    சினிமா துறையினரால் எத்தனை அபலை பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் .

    வஞ்சிக்கப்பட்டிருக்கிரார்கள் என்பதை ஜெயா பச்சன் அறிய மாட்டாரா?பாராளுமன்றத்திலே

    கண்ணீர் சிந்துவதை விட அந்த சினிமா துறையில் பலரின் கண்ணீரை துடைத்திருக்கலாமே .

    தீப்பொறி ஆறுமுகம் சொன்னது போல அடுத்தவன் பொண்டாட்டியை முதலிரவு காட்சியில்

    கட்டி பிடுத்து புரளுவதை குடும்பத்தோடு பார்க்கிறார்கள் அதுவெல்லாம் ஆபாசமில்லையாம் ,

    நான் ஏதாவது வாய் தவறி உளறி விட்டால் ஆபாசம் என்றுவிடுவார்கள் ,என்பது போல

    ஜெயா பச்சனும் ஐஸ்வர்யாவும் செய்யாத ஆபசத்தை விடவா ஆசாபர்வினின் விமர்சனம்

    ஆபாசமாக தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. சினிமா துறையினரால் எத்தனை அபலை பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் .

      வஞ்சிக்கப்பட்டிருக்கிரார்கள் என்பதை ஜெயா பச்சன் அறிய மாட்டாரா?பாராளுமன்றத்திலே

      கண்ணீர் சிந்துவதை விட அந்த சினிமா துறையில் பலரின் கண்ணீரை துடைத்திருக்கலாமே .

      தீப்பொறி ஆறுமுகம் சொன்னது போல அடுத்தவன் பொண்டாட்டியை முதலிரவு காட்சியில்

      கட்டி பிடுத்து புரளுவதை குடும்பத்தோடு பார்க்கிறார்கள் அதுவெல்லாம் ஆபாசமில்லையாம்//

      :(

      Delete
  9. //குஜராத்தில் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே கூண்டோடு அழித்தபோது தங்களுக்கு வந்ததா..???//

    -குஜராத்திலே இப்ப முஸ்லீம்ஸ் சுத்தமா இல்லையா? இது புது செய்தி எனக்கு.

    - அதனாலே இப்ப டெல்லியிலே பாதிக்க பட்டவங்களுக்கு குரல் கொடுக்க கூடாது - மிகவும் தவறான கோரிக்கை

    - மதத்தை தள்ளி வைத்து மனிதத்தை முதன்மை படுத்தி யோசிக்கவும்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. //குஜராத்திலே இப்ப முஸ்லீம்ஸ் சுத்தமா இல்லையா? இது புது செய்தி எனக்கு.//

      தமிழ்நாட்டை சுனாமி தாக்கியதாம்...

      தமிழ்நாட்டே கூண்டோவா அழிஞ்சுச்சு!!!???? இப்ப தமிழ்நாட்டில் யாருமே இல்லையா??? இது எனக்கு புதிய செய்தி ஹி..ஹி..ஹி...

      //அதனாலே இப்ப டெல்லியிலே பாதிக்க பட்டவங்களுக்கு குரல் கொடுக்க கூடாது//
      இந்த வரி எங்கே வந்திருக்கு??? எல்லா இடத்திலும் சமமா வச்சு பாருஙக் என்பது தானே பதிவில் சொல்லப்பட்டிருக்கு???

      டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டா என்ன? இல்லை ஹரியானாவில் வன்புணர்வு நடந்தா என்ன??? எல்லாரும் பெண் தானே... எல்லாருக்கும் சமமான பார்வை பாருங்க என தானே சொல்ல வந்த விஷயம்??

      //- மதத்தை தள்ளி வைத்து மனிதத்தை முதன்மை படுத்தி யோசிக்கவும்
      //

      குருட்டுக்கண்ணால் பார்த்தால் எல்லாம் குத்தம்தேன்!! ஹி..ஹி..ஹி...

      எல்லாருக்க்கும் காமெடி பண்றதே வேலையா போச்சு!!

      Delete
  10. சினிமாவை நடிகர்களை தங்களின் வாழ்கையில் முன் மாதிரியாக வரித்து கொண்ட நம் தமிழ் சகோதரர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்ப்பார்க்கிறீர்கள்? ஜெயா பாதுரி ஒரு நல்ல நடிகை அதை மீண்டும் ஒரு முறை ராஜ்ய சபாவில் நிருபித்து இருக்கிறார்.அவ்வளவுதான்.சகோதரி ஆஷா நீங்கள் சொல்வது வியாதியை வேரோடு களைய ஆனால் இவர்கள் கேட்பது தற்காலிக நிவாரணம்.

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.ஆஷா பர்வீன்...

    நெத்தியடி கேள்விகள். அதிரடி பதிவு. ஜசாக்கல்லாஹு க்ஹைர்.

    முட்டாள்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த முட்டாள்கள்தான் நம்மையும் நம் தேசத்தையும் ஆளுகிறார்கள்..! என்ன செய்வது..?

    ஆட்சியில் அமரும் அந்த முட்டாள்கள்... அறிவாளித்தனமாக குடி குடியை கெடுக்கும் என்பார்கள்..! அவர்களே டாஸ்மாக் வைத்து வியாபாரம் செய்வார்கள், முட்டாள்கள்.

    சூது தீது என்பார்கள் அறிவாளித்தனமாக. அவர்களே அரசு பசுச்சீட்டு நடத்துவார்கள், முட்டாள்கள்.


    புகையிலை உடலுக்கு கேடென்பார்கள் அறிவாளித்தனமாக. ஆனால், அவர்களே சிகரெட் பீடி சுருட்டு செய்து விற்க அனுமதித்து விட்டு அதே முட்டாள்கள் அதில் பெருத்த ஷேர் ஹோல்டர்ஸ் ஆக இருப்பார்கள்.

    அதேபோல...

    பாலியல் வன்புணர்வு -ஈவ் டீசிங் எல்லாம் சட்டப்படி குற்றம் என்பார்கள் அறிவாளித்தனமாக. ஆனால்... அதற்கான வாசலாக பாலியல் ரீதியாக தொட்டு கட்டி பிடித்து முத்தம் தந்து ... etc.,..... etc.,.... நடைபெறும் சினிமா, கோ எஜுகேஷன், டிஸ்கோத்தே, பப், டேட்டிங், பரஸ்பர லிவிங் டுகெதர் விபச்சாரம் என்று அனைத்துக்கும் லைசன்ஸ் தந்து ஊக்குவிப்பார்கள்... முட்டாள்கள்.

    இதுவே... பாலியல் வன்புணர்வு ஏழை எளிய சிறுபான்மை - தலித்துகளுக்கு நடந்தால்... பாதிக்கப்பட்ட பெண்கள் அதை அவர்களே விரும்பி அழைக்கும் அளவுக்கு அனாகரிமானவர்கள் என்பார்கள்.

    அதுவே.. பணக்கார -மேல்தட்டு -பெரும்பான்மை - ஆதிக்க சாதியினருக்கு நடந்தால்... கயவர்களை தூக்கில் போடு என்பார்கள்..!

    பாராளுமன்றத்தில் முதலைக்கண்ணீர் வடித்து முந்தானையில் மூக்கு சிந்துவார்கள். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி நச்.

    கூட்டிக்கழித்து பார்த்தால்... நிச்சயமாக இவர்கள் முட்டாள்கள் அல்ல. முட்டாள்கள் வேஷத்தில் உள்ள கள்ளக்கயவர்கள்.


    இவர்களை ஜனநாயக ரீதியில் ஒழித்து விட்டு நம்மில் அறிவாளிகள் நம் தேசத்தை கைப்பற்றி ஆள வேண்டும். அறிவாளிகள் நிச்சயமாக நம் தேச சட்டமாக இறைவனின் மனிதனுக்கான சட்டத்தை எடுப்பார்கள். அப்போதுதான்... இந்த முட்டாள்களும் அந்த கயவர்களும் திருந்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

    இப்பதிவுக்கு மைனஸ் ஓட்டு முட்டாள்கள் அறிவு பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஷிக் அண்ணா சரியா சொன்னீங்க.
      ஆனால் சிலரோ உண்மையை உணர்பவர்களாய் இல்லை.இந்த குரான் வசனம் அவர்களுக்கு. ----2.10 அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.-----

      Delete
    2. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சகோ

      மாஷா அல்லாஹ் அருமையான, சமூக அக்கறையுள்ள, தரமான, தைரியமான, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ... அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக....


      ///பருவத்தில் மட்டுமே வரவேண்டிய எண்ணங்களை
      ஆறு,ஏழு வயது பிள்ளைகளிடம் விதைத்து
      அவர்களின் அறிவுக்கண்ணை குருடாக்கி
      ஆபாசக்கண்ணை திறந்து வைத்ததில்
      பங்கு உங்களில் ஒவ்வொருவருக்கும் உண்டு தெரியுமா...?///

      இது ஒன்றை ஆழ்ந்து சிந்தித்து இருந்தால் இந்த பதிவுக்கு இவ்வளவு எதிர் கேள்விகள் எழுந்திருக்காது.தன் ரத்த பந்தங்களை விடவும் ஒரு சில சினிமா கயவர்களை நேசிக்கும் மனிதர்களே இங்கு அதிகம்.வருந்தத்தக்க ஒன்று. :(

      Delete
    3. நெத்தியடி விளாசல்கள் விட்டதற்கு நன்றி சகோ.ஆஷிக்

      Delete
  12. ஆஷா...

    மைனஸ் ஓட்டெல்லாம் வாங்குற??? உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு ஹி..ஹி..ஹி..

    பிரபல பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்...உனக்கு மைனஸ் ஓட்டு, எதிர்பதிவு விழுவதை வைத்து பதிவுலகில் நீ பிரபல பதிவர் ஆவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.... ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி...ஆமினா

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது