Friday, December 28, 2012

அறிவுக் குருடர்களும்,கருத்துக் குருடர்களும்

இந்திய நாட்டில் தவறு செய்பவனுக்கும்,திட்டமிட்டு வன்முறை நிகழ்த்துபவனுக்கும் உடனடியாக தண்டனை கிடைக்காதா என சராசரியான பாமரனுக்கு இருக்கும் உணர்வுகளும்,எண்ணங்களும் கூட  ஆட்சி செய்யும் அறிவுக்குருடர்களுக்கும்,கருத்து சொல்லும் கருத்துக்குருடர்களுக்கும் இல்லை.....

 மக்களுக்கு நல்லது செய்வேன் என சூளுரைத்து கட்சி ஆரம்பித்தவர்களும்
தினசரிகளிலும்,மீடியாக்களிலும் வருவதற்கு மட்டும் முகம் காட்டி நானும் இருக்கிறேன் என படம்காட்டிக்கொள்கின்றனர்....

நடுநிலை செய்தி தருகிறேன் என தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும்
தவிட்டுக்கொளுக்கட்டை பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டன்.....

சிந்திக்ககூடியவர்கள் எல்லாம் அரசியல் வேணாம்  ஒதுங்கிவிட்டதால்
மலட்டு சிந்தனையாளர்களும்,சினிமா வியாபாரிகளும் ஆட்சி செய்யும்
அவலநிலை........நமக்கு

பள்ளிக்கூடங்களில் பலதரப்பட்ட நுணுக்கங்களை மழலைகளிடம் வன்கொண்டு திணிக்கும் பணந்திண்ணி பள்ளிக்கூடங்கள் வீதிக்கு
வீதி பெருகி உயிர்க்கல்வி முறையை தீ வைத்துக் கொளுத்தி பணம் சம்பாதிக்கும் மிஷின்களை உருவாக்கி வருகின்றனர்....

கல்வித்துறை,மருத்துவம் எல்லாம் தனியார்மயமாக்கி
ஏழைகள் வாழும் தகுதி அற்ற நாட்டில் வாழும் அவலம்......

நாள்தோறும் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களை காணும்
ஒவ்வொரு சராசரி இந்தியனும் இன்றுதான் நீதி கிடைக்காதா....
நாளைதான் நீதி கிடைக்காதா என பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறான்.....?????
அவனுடைய உள்ளக்கொதிப்பை அறியாத அரசு
நம்மை ஆட்சி செய்வதை விட கொடுமையும்,கேவலம்  உள்ளதா....????

இதற்கு தீர்வுதான் என்ன...????
தீர்வுதான் என்ன....................????

சராசரி கடைக்கோடி மனிதனுக்கு ஏற்படும்
உணர்வுகள் கூட ஆளும் வர்க்கத்திற்கு இல்லையென்றால் .........................
மக்களிடம் புரட்சி ஏற்பட்டு சட்டங்களில் மாற்றம் ஏற்படும் நாள்
மட்டும் வெகு தொலைவில் இல்லை....
அது மட்டும் நிச்சயிக்கபட்ட உண்மை.....

அறிவுக்குருடர்களும்,கருத்துக்குருடர்களையும் மக்கள்
புறக்கணித்து வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது