Saturday, November 2, 2013

வீட்டிற்கு இரு மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம்...இது என்ன வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம் என நினைக்கலாம்.
காலில் சக்கரம் கட்டாத குறையாக மக்கள் ஓடி உழைக்கும் காலம் இது....

அருகில் உள்ள மனிதர்களிடம் பேசக்கூட,உடல் நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் எந்நேரமும் பிசியாக உள்ளனர்...

இவ்வளவு உழைத்தும் இவர்கள் அடகு வைப்பது தம் உடல் நலனைத்தான்...
இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லா வீடுகளிலும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு உள்ளது மலச்சிக்கலும்,மூல நோயும்,
குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினைகள் தான்.....

பதினைந்து வருடத்திற்கு முன்னதாக வீட்டுக்கு வீடு முருங்கை மரமும்,பப்பாளியும் இருந்தது...ஆண்,பெண் ஹார்மோன் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு கிடைத்தது....

ஆனால் இக்கால மருத்துவர்களால் , இவ்வியாதிகள் பணம் கொட்டும் தொழிலாக பார்க்கப்படுகிறது...2000 ஆண்டு வெறும் 90 கோடி புழங்கிய குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினை மருத்துவ உலகில் இப்போது 40 ஆயிரம் கோடி கொட்டும் தொழிலாக உள்ளது...

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே இதற்கு அருமையான தீர்வு இருக்க ரசாயன மருந்துகளில் மக்கள் மயங்கிக் கிடப்பதேன்....???!!!

முருங்கையிலும்,பப்பாளிப்பழத்திலும் சிறந்ததோர் தீர்வு இருக்க வேறென்ன வேண்டும்...???

முருங்கையும்,பப்பாளியும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய மரங்கள்...இவை வளர சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும்.சிலர் இவை இரண்டையும் மொட்டை மாடியில்  கூட வளர்க்கின்றனர்.ஆனால் காய்க்கும் திறன் குறையும்.

நகர்ப்புறங்களில் ஒரு சதுர அடி இடம் கிடைத்தாலும் அதிலும் சிமெண்டை கொட்டி பிளாட்டாக விற்றுவிடுகின்றனர்.பணம் நிறைய சம்பாதித்தும் உடல் ஆரோக்கியத்தை இழந்த வாழ்க்கையினால் என்ன பயன்...???

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்...???!!!

சீக்கிரமே பலன் தரும் அதிக இடம் தேவைப்படாத ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆக வேண்டிய இம்மரங்களினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் கொஞ்ச நஞ்சமல்ல

முருங்கையின் பலன்கள்:

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். 

குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது .
                                                      
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பப்பாளியின் பயன்கள்:-

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 40 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.

பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
                                                         

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. 

நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பெண்களுக்கு தீராத பிரச்னை என்றால் முடி கொட்டும் பிரச்னை தான். தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.


  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவன் எந் நோயையும் அதற்குரிய 
நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
புகாரி-5678

இவ்வளவு பயன் தரும் எளிதில் கிடைக்க கூடிய இம்மரங்கள் நம் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போமா...???!!!

2 comments:

  1. மாஷா அல்லாஹ் மிகவும் உபயோகமான தகவல்கள்... !

    தொடருங்கள் உங்கள் நன்மை தரும் பணியை !!

    ReplyDelete
  2. நல்ல பதிவு, அறிந்த விடயங்கள் சிலவற்றை நினைவூட்டியும் புதியதுமாக சிலதும் அறிந்தேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது