Friday, November 8, 2013

சிக்கன் எமன்....???

சிறுநீரகங்களில்,கல்லீரலில் கேன்சர்

ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு

கொழுப்பு நிறைந்த ஈரல் நோய்,ஹார்மோன் பிரச்சினைகள்

 ஈசியாக வரவேண்டுமா...???


மரபுவழி மருத்துவ முறைகளால் நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை ஊருக்கு உரைக்கும் நமது பயணத்தில், எண்ணற்றோர் இணைந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி. இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் அவர்களும் இப்பயணத்திற்கு தமது ஆதரவை நல்கியுள்ளார்.

குறிப்பாக, ‘இனிப்பு’ ஆவணப்படத்தில் அவர் மிக முக்கியமான பங்கேற்பு ஒன்றினைச் செய்ய உள்ளார். அது என்ன என்பது படம் முடியும் வரைக்கும் கமுக்கமாகவே இருக்கட்டும்.
                                                                 

கடந்த 2001 ஆம் ஆண்டு நான் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ’பிராய்லர் சிக்கன்’ கறியை உண்பதனால் விளையும் தீங்குகளைப் பற்றி எழுதினேன். ‘சிக்கன் எமன்’ எனும் தலைப்பில் அக்கட்டுரை குமுதம் இதழின் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இக்கட்டுரைக்கு எதிராக, கோழிப் பண்ணை உரிமையாளர்கள், அலோபதி கால்நடை மற்றும் மனித மருத்துவர்கள் பொங்கி எழுந்தனர். கோழிப்பண்ணை அமைப்பினர், அலோபதி மருத்துவர்களின் புகைப்படங்களுடன் ‘சிக்கன் உண்ண உகந்தது. இதில் புரதம் உள்ளது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தனர். சன் தொலைக்காட்சி இதுகுறித்து ‘சிறப்பு நிகழ்ச்சி’ ஒளிபரப்பியது.

என்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டறிந்த எதிர்ப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தனர்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சம் எங்கள் குழுவினருக்கு இருந்தது. ஒரே வாரத்தில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் கோழிப் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனது கட்டுரையை ஆதரித்துப் பேசும் வல்லுனர்களை உடனடியாகத் தேடி அவர்களது உதவியைப் பெற்றாக வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு காட்டிய திரு.சைதை துரைசாமி (தற்போதைய மேதகு சென்னை மேயர்), இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் ஆகிய இருவரும் அந்தக் கட்டுரைக்குத் துணை நிற்கச் சம்மதித்தனர். இவர்கள் இருவரும் தங்கள் கட்டுரைகளை விரிவாக எழுதிக் கொடுத்தனர்.


’சிக்கன் எமன்’ கட்டுரையின் எதிர்வினை மட்டுமே நான்கு பக்கங்களில் வெளியானது. இதனால், சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவியலாத நிலை எதிரிகளுக்கு ஏற்பட்டது.

பிராய்லர் சிக்கன் உண்பது தீங்கானது எனும் உண்மை இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதை முதன் முதலில் ஒரு பெரும் ஊடகம் கூறியபோது, ‘அறிவியலுக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது’ என்றெல்லாம் அதை எதிர்த்தவர்கள்தான் அலோபதிக்காரர்கள். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பதில் கூட நியாயம் இருகிறது. அவர்களது தொழிலுக்கு ஆபத்து எனும் எண்ணத்தில் அவர்கள் எதிர்த்தார்கள்.
ஆனால், மக்கள் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அலோபதிக்காரர்கள் பிராய்லர் சிக்கன் விளம்பரங்களில் தங்கள் முகங்களைக் காட்டி பரப்புரை செய்தனர்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு பிராய்லர் மீது எச்சரிக்கை மனநிலை வந்துள்ளது. நாட்டுக் கோழி வளர்ப்பு பெருகத் துவங்கிவிட்டது. தமிழக கால்நடைத்துறை நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு கணிசமான மானியத் தொகையை வழங்கி வருகிறது.


சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோய்க்கும் அலோபதி தீர்வாகாது என்று மக்கள் புரிந்துகொள்ளும் நிலையும் வ்ரைவில் உருவாக வேண்டும் என்பதே நம் விருப்பம். அந்த விருப்பத்தின் பயணத்தில் நம்மாழ்வார் அவர்கள் நெடுங்காலமாக இருக்கிறார்.
உண்மையில் அவரது பயணத்தில் நான் இணைந்துள்ளேன்; நாம் இணைந்துள்ளோம்.

நம்மாழ்வார் ஐயாவுக்கும் அவரது அடியொற்றி வாழ்வியலை வகுத்துக்கொண்டுள்ள இயற்கைச் சமூகத்தினருக்கும் நன்றி!
ம.செந்தமிழன்

இது பற்றிய மேலதிக அதிர்ச்சி தகவல் இதோ...இங்கே

http://www.aanmigakkadal.com/2013/03/blog-post_5267.html

http://suvanampoga.blogspot.in/2013/03/blog-post_912.html#.UnhwY3CBnXA

http://www.amarkkalam.net/t7875-65


KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

KFCல் உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார். புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையேஉபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!! அந்தவகைக் கோழிகளின் சில படங்கள் கீழே…            

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!! நல்லா யோசிங்க.. KFCல் உண்ணும் முன்.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.

http://www.youtube.com/watch?v=99VeH0-R9Ro&feature=player_embedded

எனவே
பிராயிலர் கோழி சாப்பிடுவதை  நிறுத்தி கொள்ளுங்கள்...

2 comments:

  1. வணக்கம்
    அருமையான விழிப்புணர்வுப் பதிவு..... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Thanks for Sharing very useful info.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது