Thursday, August 8, 2013

அர்த்தமுள்ள பெருநாள்....

இறைவனின் அமைதியும் அருளும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்....

பல ரமலான் களையும்,பெருநாட்களையும் சந்தோசத்துடன் கடந்த நாம் அவையெல்லாம் நம்மை எந்த அளவு சீர்திருத்தியுள்ளது என சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது....


நேற்றுவரை பஜ்ரை நேரத்துடன் தொழுதோம்...இன்று....???நாளை....???

நேற்றுவரை குர் ஆனை ஆர்வத்துடன் ஓதினோம்....இன்று....????நாளை....???

நேற்றுவரை வீண் பேச்சுகள்,பொய்,புறம்,கோள்,சண்டையிடுவதை தவிர்த்தோம்...நான் நோன்பாளி என்று எம்மை தடுத்துக்கொண்டொம்....
இன்று ....? நாளை...?

சிகரெட் பிடிப்பதை ரமலானில் தடுத்துக்கொண்ட உள்ளங்கள் இன்றும் நாளையும் ஊதித்தள்ளினால் நோன்பினால் என்ன பயன்....???

நேற்றுவரை தான தர்மங்களை அதிகமாக்கினோம்.....
இன்று....???
நாளை.....???

நேற்றுவரை சினிமாப்பாடல்களை பார்ப்பதை,கேட்பதை தவிர்த்தோம்...
இன்று ....???
நாளை....???

இத்தகைய காரியங்களை இனிமேல் செய்யாமல் இருப்போம்....
இன்றும் நாளையும் பள்ளிக்கு சென்று தொழ வேண்டும் என உறுதி எடுப்போம்

பெருநாள் என்பது புத்தாடை உடுத்தி,பிரியாணி சாப்பிடும் சடங்கு அல்ல...
நம்முடைய தவறுகளை சரிப்படுத்தி,அமல்களை சீராக்கி புத்தம் புது மனிதனாக ஆக்கும் அர்த்தமுள்ள நாள் ஆகும் ...


நான் சந்தித்த என்னுடைய இப்பெருநாள் அர்த்தமுள்ள நாளா....???!!!
                 

சிந்திப்போம்...செயல்படுவோம்...!!!! 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது