Monday, August 12, 2013

இவரை தெரியுமா???

இவரை தெரியுமா????

பெற்ற தந்தை எதிரி..ஊர் மக்கள் கொலை செய்யத்துணிந்தார்கள்....
தன்னந்தனியாக தனித்து விடப்பட்ட வாழ்க்கை....
மனைவியையும்,பிள்ளையும் பிரிந்து மீண்டும் தனிமை வாழ்க்கை

பெற்ற பிள்ளையைக் கொண்டும் சோதனை....
இவரை விடவா நீங்கள் சோதிக்கப்பட்டீர்கள்.






இவரையும் தெரிந்துகொள்ளுங்கள்....

பெற்ற தந்தையை பார்த்ததுமில்லை... விவரம் அறியா வயதில் தாயின் இழப்பு.. தாய்,தந்தையின் அரவனைப்பு இல்லாததை விட கொடுமை இவ்வுலகில் உண்டா

சிறு வயதிலேயே ஆடு மேய்த்து தன் உறவினர் வீட்டில் வளர்ந்தவர்...
தன் இருமகள்கள் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்யப்பட்டதையும் தாங்கிக்கொண்ட அஞ்சா நெஞ்சர்

தன் ஆறு பிள்ளைகளில் ஐந்து பிள்ளைகள் தன் கண் முன்னே இறக்கக் கண்டவர்சொந்த வாழ்க்கையில் ஆயிரம் சோதனைகளைக்கண்டாலும் மக்களுக்காக உழைத்த,மக்களின் உள்ளங்களில் வாழும் ஒரே தலைவர்.

முன்னவர் இறைத்தூதர் இப்ராஹீம் பின்னவர் இறைத்தூதர் முஹம்மது இவ்விருவரும் சமூகத்தை சீர்திருத்த அனுப்பப்பட்ட சீர்திருத்தவாதிகள்.

இவ்விருவரின் புகைப்படமோ,விடியோக்களோ இல்லாத நிலையிலும் மக்களால் பின்பற்றக்கூடிய மனிதருள் சிறந்தவர்கள்.

இறைத் தூதர்களும் சோதனைக்கு அப்பார்ப்பட்டவர்கள் இல்லை என்பதை அவர்களுடைய வாழ்க்கையே நமக்கு உணர்த்தும் மிகச்சிறந்த பாடமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது