Wednesday, January 9, 2013

கேன்சரை ஓட ஓட விரட்டுவேன்

வின்சென்ட் நாசரேத்

நீங்கள் மும்பைக்கு அடிக்கடி செல்பவராகவோ,அல்லது மும்பை வாசியாகவோ இருந்தால் மும்பை தெருக்களிலோ,ஹோட்டல்,மால்,ரயில் நிலையம் மாதிரியான இடங்களிலோ ஒரு வேளை இந்த மனிதரை சந்தித்திருக்ககூடும்.

இவர்தான் வின்சென்ட் நாசரேத்.சாதாரண குடும்பத் தலைவர்.புற்றுநோய்க்கு எதிரான இவரது போராட்டம் மும்பை முழுக்க மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் வின்செண்ட் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டோ கூட்டத்தை சேர்த்துக்கொண்டோ இதை செய்யவில்லை.


                                                      


எல்லாரையும் போல் நானும் ஒரு நல்ல வேலை,மனைவி,குழந்தை என்றுதான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.ஆனால்,என் செல்ல மகன் நெயில் புற்று நோயால் பாதிக்கப்பட்டபோதுதான் எனக்கு வாழ்வின் கறுப்பு பக்கங்கள் தெரிய ஆரம்பித்தன.அதுவும்,ஐந்து வயது பிஞ்சு குழந்தையாக இருந்த அவன் இந்த நோயால் தவித்த தவிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

பூ மாதிரியான குழந்தையை தூக்கிகொண்டு சிகிச்சைக்காக நானும் என் மனைவியும் ஓடுவோம்.வலி தாங்க முடியாமல் துடிக்கும் என் குழந்தையின் கதறல் மருத்துவமனையையே ரெண்டாக்கிவிடும்.

இது ஒருபுறம் என்றால் அந்த மருத்துவமனையில் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர்களையும் டீன் ஏஜ் பையன்களையும் பார்த்த போது எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.

வாய் மற்றும் தாடைப்பகுதி புற்று நோயால் விகாரமாக காட்சி அளிக்க....சாவை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள்.இதற்கிடையே என் செல்ல மகனை பறி கொடுத்தேன்.

நடைபிணமாக வீட்டுக்குள்ளேயே நானும் என் மனைவியும் பல நாட்கள் முடங்கி கிடந்தோம்.திடீரென்று “ஏன் இனிமேல் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளக்கூடாது”என்று தோன்றியது.அப்போது முதல் புற்றுநோய்க்கு எதிரான என் போரை ஆரம்பித்து விட்டேன்.பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க வேலையை விட்டேன்...

இளைஞர்களிடம் புற்றுநோய் உண்டாக காரணமாக இருக்கும் சிகரெட்,பான் மசாலா,குட்கா போன்ற போதைபொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அன்று முதல் ஆரம்பித்தேன்’’என்கிற வின்சென்ட்டின் தினப்படி வேலை என்ன தெரியுமா?

மும்பையில் உள்ள ஒவ்வொரு ஹோட்டல் மற்றும் மால்களுக்கு சென்று
‘நோ ஸ்மோக்கிங்’போர்டு வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதுதான்.அப்படி வைக்கப்படாத கடைகளில் உரிமையாளர்களின் சம்மதத்தோடு இவரே‘நோ ஸ்மோக்கிங்’போர்டை மாட்டி விடுகிறார்.

இது மட்டுமல்ல,பள்ளிக்குழந்தைகளை இவரே புற்றுநோய் மருத்துவமனைக்கு 
அழைத்துச் செல்கிறார்.சிகரெட் பிடிப்பது,புகையிலை மெல்லுவது,பான் மசாலா போடுவது போன்றவற்றால் புற்றுநோய்களுக்கு ஆளான நோயாளிகளை அவர்களுக்கு காட்டுகிறார்.புகையிலையின் ஆபத்தையும் விளக்குகிறார்.

குழந்தைகளைக்கொண்டு புகையிலைக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்துகிறார்.மும்பையின் ரயில் நிலையங்களில் போலீஸ் உதவியுடன் தயாராக இருக்கிறார்.புகையிலை போட்டு பிளாட்பாமில் எச்சில் துப்பும் ஆட்களை கையும்,களவுமாக பிடிக்கிறார்.கையில் ரெடியாக வைத்திருக்கும் தண்ணீர் வாளியை அவர்களிடம் கொடுத்து அந்த இடத்தையே சுத்தம் செய்ய சொல்கிறார்.

வின்சென்டின் செயல்பாடுகளைப் பார்த்து ஆசியாவின் மிகச்சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்திருக்கிறது ஒரு மிகப்பெரிய அமைப்பு.அவர் முன்பு பார்த்த அரசாங்க வேலையின் மூலம் வரும் பென்சனைக் கொண்டுதான் வின்சென்டின் குடும்பமே ஜீவிக்கிறது.

ஆனால்,வின்சென்டோ புற்றுநோயால் பாதிக்கப்படாத வருங்கால சந்ததிகள் உருவாக போராடிக்கொண்டிருக்கிறார் தன்னந்தனியாக!!!!!!!!!!!!
இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் 
பகிர்ந்துகொள்ளுங்கள்.

அவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறக்கூடும்....
மாற்றங்களை ஆரம்பித்து வைப்போமா...???

4 comments:

  1. மாஷா அல்லாஹ் ... புற்று நோய் வர பல காரணங்கள் இருக்கு .. இவைகள் மட்டும் அன்று .

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு காரணம் என்று நேர்மறையாக சிந்தியுங்கள்.

      Delete
  2. சாதரன மனிதனும் கூட சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு... அந்த மனிதருக்கு என் மணம நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது