Tuesday, November 27, 2012

நாமதான் நெய்வேலி...நாமதான் கூடங்குளம்!!’’

’’வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் தந்தா என்ன??
அறுபத்திநாலு சிலிண்டர் தந்தா என்ன????
இதை பத்தியெல்லாம் எங்களுக்கு கவலையே இல்லை...ஏன்னா நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தி தொழிற்சாலை வச்சிருக்கோம்ல’’
என்று தெம்பாக சொல்கிறார்கள்,கோயமுத்தூர் சாளைப்பாளையத்தை சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதி!

இவர்கள் அமைத்திருப்பது சாண எரிவாயு கலன்...
செலவு மொத்தம் 10 ஆயிரம் மட்டுமே!!!!
இதன் மூலம் வீட்டுக்கு தேவையான கேஸை தயாரிக்கிறார்கள்...
சுற்றுசூழலுக்கு பங்கம் இல்லாத மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படும் பேட்டரி பைக்கினை கடந்த 2 ஆண்டுகளாக 
பயன்படுத்தி வருகிறார்...

‘30ஆயிரம் ருபாயில் வாங்கிய பின்பு 600 லிட்டர் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளேன்’’என சொல்லும் தங்கவேல்,மாடுகளை அதிகரித்து,அதன் மூலம் பயோகேஸையும் அதிகரித்து ,என் குடும்பத்துக்கு தேவையான
சமையல் எரிவாயுவையும்,மின்சார உற்பத்தியையும் செய்து கொள்ளப்போகிறேன்.

இனிவரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயிகள் அனைவரும்
இதை நோக்கி வந்தே ஆக வேண்டும்.அரசாங்கம் கொடுக்கும் மின்சாரம்,சிலிண்டர் எதுவும் நமக்கு தேவையில்லை....

நாலு மாடு இருந்தால்,
நாமதான் நெய்வேலி,நாம தான் கூடங்குளம்.
அதற்கான நேரம் நெருங்கிவிட்டது’’
என்கிறார் அழுத்தமாக.


மொட்டை மாடியிலேயே காற்றாலை மற்றும் சூரியத்தகடுகள்
அமைத்து,மின்சாரம் உற்பத்தி செய்வதோடு,எரிவாயு உற்பத்தி செய்கிறார் கோயமுத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு!!!

‘கரண்ட் இல்லாமல் பிஸினஸில் 
சிரமப்பட்டபோதுதான்சோலார் யோசனை தோன்றியது...
ஆனால்,செலவு அதிகமாக இருந்த்தால் தன் சகோதரருடன் 
சேர்ந்து‘மினி விண்ட் மில்’இயந்திரங்களை தயாரித்து மாடியில் பொருத்தினோம்.24மணிநேரமும் தடையில்லாமல் கரண்ட் கிடைக்குது.


முதலில் 3000ருபாய் கரண்ட் பில் கட்டினோம்...
இப்ப வெறும் 40 ருபாய் மட்டுமே கட்டுறோம்!!!
மொத்த செலவு 3லட்சம்...இந்த இயந்திரங்கள்
 25 வருஷம் வரைக்கும் கூட ரிப்பேர் ஆகாது...

காய்கறிகழிவு மூலமாக பயோ-கேஸ் உற்பத்தி செஞ்சு 
சமைக்கிறோம்.அதனால வருஷத்துக்கு 12 சிலிண்டர் செலவு மிச்சம்...
அதே மாதிரி பேட்டரியில் ஓடும் இ-பைக் பயன்படுத்துவதால் 
வருஷத்துக்கு 200லிட்டர் பெட்ரோல் செலவு மிச்சம்.
ஆரம்பகட்ட செலவை பத்தி யோசிக்காம ...முதலீடு பண்ணிட்டா
வருஷம் முழுக்க நிம்மதியா இருக்கலாம்....!!!’’என்று விடை கொடுத்தார்.

வீட்டிற்கான கேஸ் செலவை எளிதாக பூர்த்தி செய்ய கன்னியாகுமரி,விவேகானந்தா கேந்திராவின் ‘இயற்கை வள அபிவிருத்திமையம்’எளிய செலவில் சக்தி சுரபி எரிவாயுக்கலனை
தயாரித்துக்கொடுக்கிறது...

ஒரு கனமீட்டர் வாயுவை உற்பத்தி செய்வதற்கான செலவு 18000 ருபாய் மட்டுமே ஆகும்....4,000 ருபாய் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
4பேர் உள்ள குடுமபத்துக்கு இந்த கலன் போதுமானதாகும்.

பயன்படுத்தமுடியாத சோறு,சப்பாத்தி,காய்கறி,
கூட்டு போன்றவை;மீன்,மாமிசம்,காய்,கனி ஆகியவற்றின் கழிவுகள்;
மாவு ஆலைக்கழிவு பொருட்கள்;உண்ணத்தகாத எண்ணெய் வித்துக்களின் பொருட்களனைத்தையும் இதில் பயன்படுத்தலாம்...

இதைப்பற்றி மகாதானபுரத்தை சேர்ந்த சம்பத்குமார் கூறுகிறார்.
‘எங்க வீட்டுல மொத்தம் 3 பேரு.அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி
பின்ன இருந்த காலி இடத்துல சமையலுக்கு சக்தி சுரபி கேஸ் போட்டோம்.அந்த இடத்துல 24 தென்னை மரங்கள் நின்னுச்சு.வீட்டுல மிச்சமாகுற சாப்பாடு,காய்கறிக்கழிவு எல்லாத்தையும் கலனுக்குள்ள போட்டுடுவோம்...அதுல இருந்து கிடைக்கிற கேஸ் எங்களுக்கு போதுமானதாக இருந்தது...

அதுல இருந்து வெளிவரும் கழிவை என்ன பண்றதுன்னு தெரியாம தென்னைக்கு விட்டுப்பார்த்தால் கொஞ்ச நாளிலே மகசூல் அதிகரித்தது...அதை பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் போட்டாச்சு....வீட்டுத்தேவைக்கு கேஸ் செலவும் இல்லை
காய்கறி வாங்கும் செலவு இல்லை...
உரம் வாங்கும் செலவும் இல்லை....’

தொடர்புக்கு:விவேகானந்தா கேந்திராவின் இயற்கை 
வள அபிவிருத்தி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர்:
ராமகிருஷ்ணன்
செல்:9442653975. 

3 comments:

  1. பயனுள்ள தகவல் !

    மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு, இப்போதைய காலத்திற்கு தேவையான பதிவும்கூட. நன்றி நண்பரே!

    எனது பக்கமும் வந்து போங்க.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது