Sunday, October 21, 2012

நான் கற்ற பாடம்

நான் கற்ற பாடம்பிரச்சினையா ?  அசௌகரியமா ?


பல வருடங்களுக்கு முன்பு ஓர் ஆங்கில மாத இதழில் படித்த ஒரு கட்டுரை இன்றும் என் நினைவில் இருக்கிறது. அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், ’நான் கற்ற பாடம்’ என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியிருந்தார்.


அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த  கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார். ‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை.

 இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்? ‘ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் ’பிரச்சினை’ என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.


எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை  என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே  பிரச்சினை. இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.


மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள் (inconveniences). இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘ என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.


அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா,  இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத்தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது. கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது" என்று அனுபவபூர்வமாகச் சொல்லியிருந்தார்.நீங்களும் நிதானமாக யோசியுங்கள்-உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா, இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!


இக்கட்டுரையை சமீபத்தில் ஒரு வார இதழில் படித்தேன்...
உண்மையில் படிப்பினை பெற வேண்டிய விசயம் தான்....சில வாரங்களுக்கு முன்னதாக நான் சொல்லாத விசயத்தை சொன்னதாக யாரிடமோ சொல்லி அது என் காதுக்கு வந்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது...நாம சொல்லவேயில்லயே....எப்படித்தான் இப்படியெல்லாம்யோசிக்கிறாங்களோனு ஒரே ஃபீலிங்....


காரைக்காலில் என் அறிவாளி தோழி ஒருவர் உள்ளார்...
அவரிடம் சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்டேன்...
இவ்ளோதானா மேட்டர்னு சிரிச்சிட்டு எனக்கு அவங்க
லைஃப்ல நடந்த ஒரு சம்பவத்தை சொன்னாங்க....


அவங்களுக்கு மேரேஜ் நடந்த புதிதில் அவங்க மாமியா
எதுக்கெடுத்தாலும் குறை சொல்வாங்களாம்...
அவங்களுக்கு ஒரே வருத்தமா இருக்குமாம்.
அவங்க தாய்மாமா ஒருத்தர் பெரிய ஜீனியஸ்ஸாம்...


அந்த தாய்மாமாட தான் சொன்னாங்களாம்,
‘என் மாமியா நான் என்ன பண்ணுனாலும்
குறை சொல்றாங்கனு சொன்னாங்களாம்’
நாம் என்ன சொல்வொம்....உங்க வீட்டுக்காரர்ட  சொல்லுனு
சொல்வொம்..அவர் என்ன சொன்னார் தெரியுமா???


"உள்ளதைதானே சொல்றாங்கனு சொன்னாராம்....இதுக்கு ஏன் கவலைப்படறனு'' கேட்டாங்களாம்....


என் தோழி மறுபடியும் சொன்னாங்களாம்.....
''நான் செய்யவே இல்லாத காரியத்தை செஞ்சேனு சொல்றாங்களே,
அதுக்கு என்ன பண்ணனு கேட்டாங்களாம்...''

''நீ செய்யாததைதானே சொல்றாங்க....,இதுக்கு போய் கவலைப்படலாமானு கேட்டாங்களாம்''


என் தோழிக்கு உண்மை புலப்பட்டதாம்...
அந்த 2 வரி ஃபார்முலாவைத்தான் தான்
இப்பொழுது ஃபாலோவ்பண்ணுவதாக கூறினார்....
எனக்கும் அதே ஃபார்முலாவை ஃபாலோவ் பண்ணுமாறு
அன்புக்கட்டளையிட்டார்...
எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது...:-)


நம்மை சில பேர் ஆபிஸ்லயோ,வீட்டிலயோ எப்பவும் குறை
சொன்னால் நாம் இந்த பார்முலாவை நினைவு வச்சுகிட்டோம்
என்றால் நோ டென்சன் தான்....நோ பிபி தான்.....
நான் கற்ற பாடம்....இது.....
இதெல்லாம் பிரச்சினையே இல்லை....
அசௌகரியமே என உணர்ந்து கொண்டேன்....
மீண்டும் சந்திப்போம்..

7 comments:

  1. salaam

    வாழ்த்துக்கள் ... தெரியாதத சொல்லி தெரிய படியப்படுதியமைக்கு ....

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து கொண்டதை கருத்திட்டதற்கு நன்றி.:-)

      Delete
  2. இதயே என் STYLE ல சொல்லனும்னா.....

    பிரச்சினைய பிரச்சினையா நினைக்காம, பிரச்கினையே இல்லாம நினைச்சா, அது பிரச்சினையே இல்ல. பிரச்சினையே இல்லாதத, பிரச்சினையா நினச்சு, பிரச்சினையா பாத்தா அது தான் பிரச்சினை.

    ReplyDelete
    Replies
    1. இதுதான் உங்க பிரச்சினையோ....
      முதல் வருகைக்கு நன்றி சகோ

      Delete
  3. as salamu alaykum sago asha,

    intha varigal enakku puriyalai? enna artham???

    //என் தோழி மறுபடியும் சொன்னாங்களாம்.....
    ''நான் செய்யவே இல்லாத காரியத்தை செஞ்சேனு சொல்றாங்களே,
    அதுக்கு என்ன பண்ணனு கேட்டாங்களாம்...''

    ''நீ செய்யாததைதானே சொல்றாங்க....,இதுக்கு போய் கவலைப்படலாமானு கேட்டாங்களாம்''//

    ReplyDelete
  4. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ,
    கப்பல் கேப்டன் சொன்னது முற்றிலும் சரியே ...
    உலகத்தில் யாருக்குதான் பிரச்சனைகளும், அசௌகரியங்களும் இல்லை ..!!??
    அசௌகரியங்களை பிரட்சனைஎன்று எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படுவது
    நாம்தான் என்று புரிந்துக்கொண்டால், எல்லாமே ஈஸி அதாவது பிரச்சனையுமில்லை ,
    அசௌகரியங்களும் இல்லை...இது என் பாலிஸி

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது