Thursday, September 12, 2013

மகிழ்ச்சியாய் வாழ....

1,இன்றைய நாளுக்காகவே வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீ வாழ்க்கையை மேற்கொள்.
இல்லையெனில்,உனது எண்ணங்கள் சிதறும்;குழப்பம் ஏற்படும்;கவலையும் துக்கமும் அதிகரிக்கும்.
அதாவது,நீ காலைப்பொழுதை அடைந்தால் மாலைப்பொழுதை எதிர்பார்க்காதேமாலைப்பொழுதை அடைந்தால் காலைப்பொழுதை எதிர்பார்க்காதே!
2,நேற்றை முற்றிலும் மறந்துவிடு.முடிந்து போனதைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பது ஒரு வகைப்பைத்தியக்காரத்தனம்
3,வருங்காலத்தைப்பற்றிய கவலையில் மூழ்காதே;வருங்காலம் என்பது மறைவானது.அது வரும் வரைஅதைப்பற்றி சிந்திக்காதே
4,எதிரிகளின்,பொறாமைக்காரர்களின் விமர்சனங்களைக்கண்டு தளர்ந்து விடாதே;தைரியமாக இரு.விமர்சனங்கள் உனது மதிப்பை மேலும் உயர்த்தும்.
5,இறைநம்பிக்கையும்,நற்செயலும் உனது வாழ்வில் உண்மையான,சிறந்த மகிழ்ச்சியை உருவாக்கும்.
6,நிம்மதி,மன அமைதி,ஆறுதல் இவை உன் வாழ்க்கையில் மலர வேண்டுமென்றால் இறைவனைத்துதி.
7,அனைத்தும் இறைவனது முடிவின்படியே நடக்கின்றது என்பதை அடியார்கள் உணர வேண்டும்.
8,எவரிடமும் நன்றியை எதிர்பார்க்காதே.
9,கடுமையான இன்னல்களைத்தாங்கிக்கொள்ள உன்னை நீ தயார்படுத்து
10,நடந்தவையெல்லாம் உனது நன்மைக்கே என நம்பு
11,நன்மையானதையே இறைவன் இறைநம்பிக்கையாளர்கள் மீது விதிக்கிறான்.
12,இறைவனது அருட்கொடைகளைச் சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்து.
13,பலரை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய் என்பதைப்புரிந்து கொள்.
14,விரைவில் விடியல் வரும்
15,சோதனைகள் வரும்போது இறைவனைத்தொடர்புகொள்.
16,சோதனைகள் உன்னைச் செதுக்கும்.உன் இதயத்தை வலுப்படுத்தும்
17,துன்பத்திற்குப்பின் இன்பம் உண்டு.
18,அற்பக்காரியங்கள் உன்னை அழித்து விட வேண்டாம்
19,உன் இறைவன் மிகவும் மன்னிப்பவன்
20,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே,கோபம் கொள்ளாதே!!!
21,ரொட்டி,தண்ணீர்,நிழல் இவை மூன்றும்தான் வாழ்க்கை.இவற்றை விட அதிகமானப்பொருட்களைத்தேடுவதில் உனது வாழ்க்கையைத் தொலைத்து விடாதே
22,உங்களது வாழ்வாதாரம் வானத்தில் உள்ளது,உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதும் வானத்தில்தான் உள்ளது. அல் குர் ஆன்51:22
23,நடந்துவிடுமோ என நீ அஞ்சக்கூடியவற்றில் பெரும்பாலானவை நடைபெறாது.
24,சோதனைக்கு ஆளானவர்களிடம் உனக்கு முன்மாதிரி உள்ளது.
25,இறைவன் ஒரு சமுதாயத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான்.
26,துயரங்கள் ஏற்படும்போது பெருமானார் கற்றுத்தந்தப் பிரார்த்தனைகளை ஓது.
27,நல்ல பயன்மிக்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இரு.சும்மா இருக்காதே.
28,வதந்திகளை விட்டுவிடு.அவற்றை நம்பாதே.
29,உனது பகை உணர்வும்,பழி வாங்கும் எண்ணமும் உனது எதிரியை விட உன் நலனைத்தான் அதிகம் பாதிக்கும்.
30,துன்பங்கள் உனது பாவங்களைப்போக்கும்.
இந்த அடிப்படைக்கூறுகளை உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீ கடைப்பிடித்தால்....
மகிழ்ச்சியுடன் வாழ்வாய்
மனநிம்மதியுடன் வாழ்வாய்
நற்செய்தியுடன் வாழ்வாய்
நம்பிக்கையுடன் வாழ்வாய்.
-டாக்டர்.ஆயில் அலகர்னீ

1 comment:

  1. அற்புதமான வார்த்தைகள்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது