Wednesday, November 13, 2013

கருப்பு தக்காளி,கலர் கேரட்???

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கனகாம்பரம்,ஒரு கிலோ எடை உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொய்யா,இயல்பான தோற்றத்தைக்காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்க்கும் சவுக்கு மரங்களை தமிழக விவசாயி கண்டுபிடித்துள்ளார் என தூக்கி வைத்துக்கொண்டாடும் ஊடகங்களுக்கு அறிவே இல்லையா....???

இயற்கைக்கு மாற்றாக மலட்டு பிராய்லர் கோழிகள்,மலட்டு பிராய்லர் முட்டைகள் தீமையானவை என கூவுகிறார்கள்...பிடி கத்தரிக்காயை வசைமாறி பொழிகிறார்கள்...ஆனால்,தமிழக விவசாயிக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததை பெருமையாக குறிப்பிடுகிறார்கள்...!!!

மரபணு மாற்றுவதை விட்டு விட்டு மரபுவழி வாழ்க்கையை வாழ்வோம்.
பேராசையின் தொடக்கமே அடுத்தவனை அழித்து தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பதேயாகும்.

இதோ அடுத்து வரவுள்ள  கருப்பு தக்காளி,கலர்புல் கேரட்...

                             
                                                               

Saturday, November 9, 2013

எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 2

யார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ,அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்.இது இன்று எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும்.என்றாலும் இது வணிகத்துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என விடாமுயற்சியோடு போராடுபவர்கள் வெற்றிக்கனியை பறிப்பது மிக எளிது...

அப்படி இளம்வயதில் ஏற்றுமதி உலகில் நுழைந்த கவுதம் தன் வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார்

சந்தித்தோம்...சாதித்தோம்....

என் பெயர் கவுதம்.வயது23.கல்லூரியில் படித்து முடித்தபின் சொந்த ஊரான திருச்சியில் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்ற என்கிற எண்ணத்தில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.

பாலைவனத்தில் தண்ணீர் தேடுபவனுக்கு சுனை நீர் கிடைத்தது போல புதிய தலைமுறை பத்திரிக்கையை கடையில் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வாங்கிப்படித்தேன்.

வாரா வாரம் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையில் எவரும் செய்யலாம் ஏற்றுமதி என்கிற தொடர் வெளிவரப்போகின்றது என்ற அறிவிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.

ஏற்றுமதி பற்றி யோசித்துக்கொண்டிருந்த எனக்கு,நீயும் ஏற்றுமதியாளனாக மாற முடியும் எனக்கூறுவது போல் அமைந்திருந்தது அந்த அறிவிப்பு.

தொடர் ஆரம்பித்தது முதல் முடியும்வரை எனக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே வந்தது.அதிலிருந்த வழிகாட்டுதலின்படி வெறும் 250ரூபாய் செலவிலேயே எனது ஏற்றுமதி நிறுவனத்திற்கான அரசின் அனுமதியைப்பெற்றுவிட்டேன்.இந்த அனுமதியைப்பெற்றுத்தர சில ஏற்றுமதி ஆலோசகர்கள் பத்தாயிரம் ருபாய் வரை கேட்கிறார்கள்.

நான் மட்டும் அல்ல.எனது நண்பன் அசோக்கும் இப்போது ஏற்றுமதியாளராக விரும்பி என்னோடு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.இருவரும் நேரில் சென்று அவர்களை சந்தித்தோம்.

அவரது வழிகாட்டுதலின்படி முதல் ஏற்றுமதி ஆர்டர் துபாய் நாட்டிலிருந்து எங்களுக்கு கிடைத்தது.அவர் கொடுத்த குறுந்தகட்டில் இருந்துதான் அந்த இறக்குமதியாளரின் முகவரி எங்களுக்கு கிடைத்தது.இப்போது வாரந்தோறும் திருச்சியில் இருந்து காய்கறிகளை துபாய்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

எங்களது ஆர்வத்தையும்,வேகத்தையும் பார்த்த துபாய் நாட்டுக்காரர் இப்போது ஆர்டரை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகப்படுத்தி நிறைய காய்கறிகளை தொடர்ந்து எங்களிடம் வாங்கி வருகிறார்.

அரிதாசன் அவர்களிடம் அடிக்கடி எங்கெங்கு BYER SELLER BEET  நடக்கின்றன போன்ற விவரங்களை அவ்வப்போது கேட்டுத்தெரிந்துகொள்வோம்.சமீபத்தில் சென்னையில் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் நடத்திய வர்த்தக கண்காட்சி நடைபெறுவதாகக் கூறியதைக்கேட்டு அங்கு சென்றோம்.
                                                                 

அவர் கூறியபடியே அன்றைய நாள் முழுவதும் கண்காட்சி உள்ளேயே இருந்தோம்.எங்களைப்பற்றி எல்லாரிடமும் அறிமுகம் செய்து கொண்டோம்.எங்கள் ஆர்வத்தையும்,நாங்கள் பேசிய விவரங்களையும் கேட்ட தாய்லாந்து நாட்டு இறக்குமதியாளர் ஒருவர்,இப்போது மாதம் 2000கிலோ ஏலக்காய் அனுப்பச் சொல்லி ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
ரொம்பவும் மகிழ்வாய் இருக்கிறோம்.

                                                                                              அன்புடன்
                                                                                 கவுதம்  மற்றும் அசோக்
                                                                                ரெயின் டிராப் இண்டர்நேசனல்,
                                                                                  திருச்சி.செல்:9688338881
எவரும் செய்யலாம் ஏற்றுமதி-பாகம் 1
http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_25.html

தொடர்புக்கு;
ஏற்றுமதி வழிகாட்டியாளர்
வீ.அரிதாசன்
94441 46807

Friday, November 8, 2013

சிக்கன் எமன்....???

சிறுநீரகங்களில்,கல்லீரலில் கேன்சர்

ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு

கொழுப்பு நிறைந்த ஈரல் நோய்,ஹார்மோன் பிரச்சினைகள்

 ஈசியாக வரவேண்டுமா...???


மரபுவழி மருத்துவ முறைகளால் நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை ஊருக்கு உரைக்கும் நமது பயணத்தில், எண்ணற்றோர் இணைந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி. இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் அவர்களும் இப்பயணத்திற்கு தமது ஆதரவை நல்கியுள்ளார்.

குறிப்பாக, ‘இனிப்பு’ ஆவணப்படத்தில் அவர் மிக முக்கியமான பங்கேற்பு ஒன்றினைச் செய்ய உள்ளார். அது என்ன என்பது படம் முடியும் வரைக்கும் கமுக்கமாகவே இருக்கட்டும்.
                                                                 

கடந்த 2001 ஆம் ஆண்டு நான் குமுதம் இதழில் பணியாற்றியபோது, ’பிராய்லர் சிக்கன்’ கறியை உண்பதனால் விளையும் தீங்குகளைப் பற்றி எழுதினேன். ‘சிக்கன் எமன்’ எனும் தலைப்பில் அக்கட்டுரை குமுதம் இதழின் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இக்கட்டுரைக்கு எதிராக, கோழிப் பண்ணை உரிமையாளர்கள், அலோபதி கால்நடை மற்றும் மனித மருத்துவர்கள் பொங்கி எழுந்தனர். கோழிப்பண்ணை அமைப்பினர், அலோபதி மருத்துவர்களின் புகைப்படங்களுடன் ‘சிக்கன் உண்ண உகந்தது. இதில் புரதம் உள்ளது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தனர். சன் தொலைக்காட்சி இதுகுறித்து ‘சிறப்பு நிகழ்ச்சி’ ஒளிபரப்பியது.

என்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டறிந்த எதிர்ப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தனர்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சம் எங்கள் குழுவினருக்கு இருந்தது. ஒரே வாரத்தில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் கோழிப் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனது கட்டுரையை ஆதரித்துப் பேசும் வல்லுனர்களை உடனடியாகத் தேடி அவர்களது உதவியைப் பெற்றாக வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு காட்டிய திரு.சைதை துரைசாமி (தற்போதைய மேதகு சென்னை மேயர்), இயற்கை வேளாண் மெய்யறிவாளர் நம்மாழ்வார் ஆகிய இருவரும் அந்தக் கட்டுரைக்குத் துணை நிற்கச் சம்மதித்தனர். இவர்கள் இருவரும் தங்கள் கட்டுரைகளை விரிவாக எழுதிக் கொடுத்தனர்.


’சிக்கன் எமன்’ கட்டுரையின் எதிர்வினை மட்டுமே நான்கு பக்கங்களில் வெளியானது. இதனால், சட்டப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவியலாத நிலை எதிரிகளுக்கு ஏற்பட்டது.

பிராய்லர் சிக்கன் உண்பது தீங்கானது எனும் உண்மை இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதை முதன் முதலில் ஒரு பெரும் ஊடகம் கூறியபோது, ‘அறிவியலுக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது’ என்றெல்லாம் அதை எதிர்த்தவர்கள்தான் அலோபதிக்காரர்கள். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பதில் கூட நியாயம் இருகிறது. அவர்களது தொழிலுக்கு ஆபத்து எனும் எண்ணத்தில் அவர்கள் எதிர்த்தார்கள்.
ஆனால், மக்கள் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அலோபதிக்காரர்கள் பிராய்லர் சிக்கன் விளம்பரங்களில் தங்கள் முகங்களைக் காட்டி பரப்புரை செய்தனர்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு பிராய்லர் மீது எச்சரிக்கை மனநிலை வந்துள்ளது. நாட்டுக் கோழி வளர்ப்பு பெருகத் துவங்கிவிட்டது. தமிழக கால்நடைத்துறை நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு கணிசமான மானியத் தொகையை வழங்கி வருகிறது.


சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோய்க்கும் அலோபதி தீர்வாகாது என்று மக்கள் புரிந்துகொள்ளும் நிலையும் வ்ரைவில் உருவாக வேண்டும் என்பதே நம் விருப்பம். அந்த விருப்பத்தின் பயணத்தில் நம்மாழ்வார் அவர்கள் நெடுங்காலமாக இருக்கிறார்.
உண்மையில் அவரது பயணத்தில் நான் இணைந்துள்ளேன்; நாம் இணைந்துள்ளோம்.

நம்மாழ்வார் ஐயாவுக்கும் அவரது அடியொற்றி வாழ்வியலை வகுத்துக்கொண்டுள்ள இயற்கைச் சமூகத்தினருக்கும் நன்றி!
ம.செந்தமிழன்

இது பற்றிய மேலதிக அதிர்ச்சி தகவல் இதோ...இங்கே

http://www.aanmigakkadal.com/2013/03/blog-post_5267.html

http://suvanampoga.blogspot.in/2013/03/blog-post_912.html#.UnhwY3CBnXA

http://www.amarkkalam.net/t7875-65


KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

KFCல் உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார். புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையேஉபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!! அந்தவகைக் கோழிகளின் சில படங்கள் கீழே…            

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!! நல்லா யோசிங்க.. KFCல் உண்ணும் முன்.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.

http://www.youtube.com/watch?v=99VeH0-R9Ro&feature=player_embedded

எனவே
பிராயிலர் கோழி சாப்பிடுவதை  நிறுத்தி கொள்ளுங்கள்...

Wednesday, November 6, 2013

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

பொள்ளாச்சியில் திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு ‍ 3 இளைஞர்கள் கைது

ஆசிட் விற்பனையை அரசாங்கம் தடை செய்தாலும் ஆசிட் வீச வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதை எப்படியும் பெறத்தான் செய்வான்.

திருட்டு ஒரு குற்ற செயல் என்று அறிவித்து விட்டதால் திருட்டு குறைந்து விடுவதில்லை என்பது போல..



தடை செய்யப்பட்ட எந்த பொருளும், எளிதிலோ அல்லது (பண பலம் கொண்டு) சற்றே சிரமமப்பட்டோ பெறப்படும் வகையில் தான் நமது நாட்டு சட்டங்களின் ஓட்டைகள் அமைந்துள்ளன.

ஒரு பெண்ணை சீரழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒருவனுக்கு ஒரு வேளை ஆசிட் கிடைக்கவில்லை என்றால் துப்பாக்கி கிடைக்கும், அதுவும் கிடைக்கவில்லை என்றால் கத்தி, அரிவாள் கிடைக்கும்.

அதே சமயம், இவ்வாறு ஒரு பெண்ணின் உயிரை பறித்தால் உன் தலை இருக்காது என்று சட்டம் இயற்றினால், அவனது கையில் ஆசிடை இலவசமாக கொடுத்தால் கூட அதை பயன்படுத்த மாட்டான்.

இது தான் வேறுபாடு ! இது தான் மனித இயல்பு !!

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

Thanks:Nashid Ahmed

Tuesday, November 5, 2013

ஆஸ்திரேலியன் ஆரஞ்சு...... ஆபத்து வந்துருச்சு

கிர்ணிப்பழம் சைஸில் இருந்தது அந்தக் கொய்யாப்பழம். 'இவ்ளோ பெரிசா?’ என வாய் பிளந்தபோது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ஹைபிரிட் கொய்யா!'' என்றார் பழக் கடைக்காரர். 
                                                         
பக்கத்தில், அப்படியே நம் ஊர் கொய்யா சைஸில், கொட்டை இல்லாத கலிஃபோர்னியன் திராட்சை; செக்கச்செவேல் என காபூல் மாதுளை, விதை இல்லாத பெரிய இலந்தை, 'லேத்’தில் அடித்துச் செய்ததுபோல் வார்த்தெடுத்த பளபள பெங்களூரு கேவன்டிஷ் வாழைப்பழம். 
                                                         
விவரம் அறியாப் பழக்கடைக்காரர், ''எல்லாமே நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!'' என்றார். 'இனிப்பு மட்டும்தான் பழத்தின் சுவையா?’ என்ற யோசனையுடன் கொஞ்சம் நகர்ந்தபோது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் ஆஸ்திரேலியன் ஆரஞ்சு கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. 
                                                                 
வழக்கமாக, கொஞ்சம் தொளதொளவென்ற தோலுடன், உரிக்க ரொம்பத் தோதாக இருக்குமே... அந்த கமலா ஆரஞ்சைக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடிவது இல்லை. ஆனால், கமலா ஆரஞ்சு பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லாம் 'கமலா’வுக்கோ, 'கமலாவின் பாட்டி’க்கோ தூரத்து உறவுகூடக் கிடையாது.                  

இப்படி எல்லாமே பெரிது பெரிதாக, கண்களை ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி செய்யப்படும் இவை எந்த அளவுக்கு உடலுக்கும் உழவுக்கும் நல்லது? 'இனிப்புச் சுவைக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத் துப் பிள்ளைங்களைக் கெடுக்காதீங்க... பழம் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப பழங்கள் மேலயும் பழி சொல்றீங்க!’ என்று பதற வேண்டாம். பழங்களைப் பரிந்துரைப்பதன் காரணமே, அதில் நிறைந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் கூட்டு இனிப்பு சேர்த்து சுவைபட அவை வழங்கும் அற்புதமான மருத்துவத் திறனுக்காகத்தான். 

ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு இனங்கள் எத்தனை சத்து நிரம்பியவை? அதிக இனிப்பும், பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே இவற்றில் கிடைக்கும். ஒட்டு ரகங்களின் கூடுதல் இனிப்பைப் பார்த்தால், 'கொஞ்சம் வைட்டமின் தெளித்த மைசூர்பாகு தேவலையோ?’ எனத் தோன்றுகிறது. கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்னைக்கும் உகந்தது என்பதால், மாதுளைக்கு எப்போதும் கனி வகையில் தனி இடம் உண்டு. 

ஆனால், தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையின் இனிப்பு, நம் ஊர் நாட்டு மாதுளையை ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிக்கும் சர்க்கரை வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? மெள்ள உள்வாங்கும் இனிப்புடன், இரும்புச் சத்தையும், நார்ச் சத்தை யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின் சுவையும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுளை, விலை குறைவாக, ஓரமாக இருப்பது வேதனை. 

மதுரை, தேனிப் பக்கம் கொடி கட்டிப் பறக்கும் கொட்டை உள்ள பன்னீர்த் திராட்சையின் உள்ளே இருக்கும் விதைகூட ஆரோக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'மஸ்கட் திராட்சை’ என விவசாயிகளால் அழைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்சையின் கொட்டையில் உள்ள எண்ணெய், இதய நோய்க்கு மருந்து. 'ரிஸ்வெரட்ரால்’ எனும் சத்து நிறைந்திருக்கும் இந்த கிரேப் சீட் ஆயிலுக்கு இப்போது கிரேக்க உலகிலும் வளர்ந்த நாடுகளிலும் ஏக கிராக்கி. ஆனால் நாமோ, 'இதென்ன துவர்க்கிறது’ எனத் திராட்சையைத் தின்றுவிட்டு, கொட்டையைத் துப்புகிறோம். 

புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபோர்னியன் இனிப்பு திராட்சையை நமக்குக் கூடுதல் விலையில் தந்துவிட்டு, திராட்சை விதை எண்ணெயைக் கேப்சூல் குப்பியில் அடைத்து, மருத்துவரை வைத்து மிரட்டிச் சாப்பிடவைக் கிறார்கள். ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பெரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக, பெரிதாக நமக்குள் புகும் சுவைகள், இத்தனை நாள் இருந்துவந்த பழங்களின் பொத்தாம்பொதுவான பயனையும் காலி செய்துவிடுமோ என்று அஞ்சவைக்கிறது. 

உணவின் சத்து விஷயம் இப்படி என்றால், ஹைபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் உரமும், பூச்சிக்கொல்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும்,விலைமதிப்பில்லாத மனித உடலை மாசுபடுத்தும் கேடு இன்னொரு பக்க வேதனை. 

'இத்தனை கோடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப் பக்கம் பறித்து வருவதைவைத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பேசுங்க பாஸ்!’ என இணையத்தில் இதைப் படிக்கும் யாரேனும் திட்டி எழுதக்கூடும். போதாக்குறைக்கு, போன வாரம் நமது பிரதம மந்திரி வேறு, 'விவசாயத்தில் தொழில்நுட்பம் ரொம்ப அவசியம். மேம்போக்காக எதிர்க்க வேண்டாம். விவாதிக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிஉள்ளார். 

நாங்களும் தொழில்நுட்பத்தை மேம்போக்காக எதிர்க்கவில்லை. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள் நோக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல் உன் அனுபவத்தைவிட மேலானது’ என்ற மமதை இன்றி விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விடை மட்டும் தான் சூழலுக்கு இசைவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம் தரும். நாட்டின் இறையாண்மைக்குப் பலம் தரும்; வாருங்கள் விவாதிப்போம்! .

சீக்கிரமே சம்பாத்தித்து சீக்கிரம் அனுபவித்து சீக்கிரமே சாகும் திட்டத்தை செயல்படுத்தும் கார்பரேட்  பணமுதலைகளின் குறுக்கு புத்தி இது.

நன்றி-மருத்துவர் சிவராமன்.

மேலும் அதிக விவரங்களுக்கு...

http://valaiyukam.blogspot.in/2011/04/bt.html


Monday, November 4, 2013

மரபணு மஞ்சள் வாழைப்பழம் -அதிர்ச்சி தகவல்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு  வாழைப்பழமாவது  சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு  மாற்று பெரிய  மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே  வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ்,  தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,  புட் பாய்சன்... என்று கடுமையாக  அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது  இந்த மரபணு மாற்று  மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

 இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.  இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். 
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். 

பூச்சிக் கொல்லிகளை  அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை  என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன்  இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக  விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை. 
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ்  வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
 
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின் டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர். 

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில்  இந்த  பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை   பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது. 

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய  கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. 

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த  பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. 

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே  விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.  ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும். 
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது
 
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது:
 

பெங்களூர் வாழைப்பழம் என்று  விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி.  ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி.  ரக  கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது. இவ்வகை பி.டி.  ரக மரபணு மாற்று  வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்
         
புறக்கணிப்போம் ...புறக்கணிப்போம்...
மரபணு மாற்றுப்பயிர்களை புறக்கணிப்போம்

Saturday, November 2, 2013

வீட்டிற்கு இரு மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம்...இது என்ன வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம் என நினைக்கலாம்.
காலில் சக்கரம் கட்டாத குறையாக மக்கள் ஓடி உழைக்கும் காலம் இது....

அருகில் உள்ள மனிதர்களிடம் பேசக்கூட,உடல் நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் எந்நேரமும் பிசியாக உள்ளனர்...

இவ்வளவு உழைத்தும் இவர்கள் அடகு வைப்பது தம் உடல் நலனைத்தான்...
இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லா வீடுகளிலும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு உள்ளது மலச்சிக்கலும்,மூல நோயும்,
குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினைகள் தான்.....

பதினைந்து வருடத்திற்கு முன்னதாக வீட்டுக்கு வீடு முருங்கை மரமும்,பப்பாளியும் இருந்தது...ஆண்,பெண் ஹார்மோன் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு கிடைத்தது....

ஆனால் இக்கால மருத்துவர்களால் , இவ்வியாதிகள் பணம் கொட்டும் தொழிலாக பார்க்கப்படுகிறது...2000 ஆண்டு வெறும் 90 கோடி புழங்கிய குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினை மருத்துவ உலகில் இப்போது 40 ஆயிரம் கோடி கொட்டும் தொழிலாக உள்ளது...

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே இதற்கு அருமையான தீர்வு இருக்க ரசாயன மருந்துகளில் மக்கள் மயங்கிக் கிடப்பதேன்....???!!!

முருங்கையிலும்,பப்பாளிப்பழத்திலும் சிறந்ததோர் தீர்வு இருக்க வேறென்ன வேண்டும்...???

முருங்கையும்,பப்பாளியும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய மரங்கள்...இவை வளர சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும்.சிலர் இவை இரண்டையும் மொட்டை மாடியில்  கூட வளர்க்கின்றனர்.ஆனால் காய்க்கும் திறன் குறையும்.

நகர்ப்புறங்களில் ஒரு சதுர அடி இடம் கிடைத்தாலும் அதிலும் சிமெண்டை கொட்டி பிளாட்டாக விற்றுவிடுகின்றனர்.பணம் நிறைய சம்பாதித்தும் உடல் ஆரோக்கியத்தை இழந்த வாழ்க்கையினால் என்ன பயன்...???

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்...???!!!

சீக்கிரமே பலன் தரும் அதிக இடம் தேவைப்படாத ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆக வேண்டிய இம்மரங்களினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் கொஞ்ச நஞ்சமல்ல

முருங்கையின் பலன்கள்:

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். 

குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது .
                                                      
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பப்பாளியின் பயன்கள்:-

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 40 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.

பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
                                                         

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. 

நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பெண்களுக்கு தீராத பிரச்னை என்றால் முடி கொட்டும் பிரச்னை தான். தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.


  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவன் எந் நோயையும் அதற்குரிய 
நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
புகாரி-5678

இவ்வளவு பயன் தரும் எளிதில் கிடைக்க கூடிய இம்மரங்கள் நம் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போமா...???!!!