Showing posts with label நீ குடித்து வாழாதே...!!! குடும்பத்தை மகிழ்வித்து வாழ்..!!!. Show all posts
Showing posts with label நீ குடித்து வாழாதே...!!! குடும்பத்தை மகிழ்வித்து வாழ்..!!!. Show all posts

Saturday, October 12, 2013

சிந்திப்போரின் சிந்தனைக்கு....!!!

நீ மனிதனை இகழ்ந்து வாழாதே...!!!
    இறைவனைப் புகழ்ந்து வாழ்...!!!

நீ வல்லவனாக வாழ்வதை விட...
    நல்லவனாக வாழ்...!!!

நீ குடித்து வாழாதே...!!!
    குடும்பத்தை மகிழ்வித்து வாழ்..!!!

நீ திருடுபவனாக வாழாதே..!!!
    திருத்துபவனாக வாழ்...!!!

நீ பிறர் பொருளை எடுத்து வாழாதே...!!!
    பிறருக்கு பொருளை கொடுத்து வாழ்...!!!

நீ பிறர் உன்னிடம் திருடுவதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரிடம் திருடாதே...!!!

நீ பிறர் உன்னை அடிப்பதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை அடிக்காதே...!!!

நீ பிறரை கொல்லாதே...!!!
    பிறரால் கொல்லப்படுவாய்...!!!

நீ பிறர் உன்னை கொலை செய்வதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை கொலை செய்யாதே...!!!

நீ உன் மனைவி,மகள்,சகோதரி கற்பை இழந்துவிடுவதைவிரும்ப மாட்டாய்..!!!
     பிறர் மனைவி,மகள்,சகோதரியின் கற்பை இழக்கச் செய்து விடாதே...!!!


                                      

இறைவன் கூறுகின்றான்....

நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக்கொலை செய்கிறாரோ,அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் அவர் கொலை செய்தவர் போன்றவராவார்.மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
குர் ஆன் 5;32

எவனொருவன் , ஒரு நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். இறைவன் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும்  தயாரித்திருக்கிறான்.குர் ஆன் 4:93

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.குர் ஆன் 3:185

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா??? குர் ஆன் 47:24

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...


நீங்கள் மண்ணில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள்.
விண்ணில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
நூல்:அபூதாவூத்

தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவர் அவருக்கு வாழ்வு அளித்தவர் போலாவார்.
நூல்:இப்னுமாஜா

ஒருவர் தமக்கு எது கிடைக்க வேண்டும் என விரும்புவாரோ அதையே அவர் மக்களுக்கு விரும்பட்டும்.
நூல்:முஸ்லிம்.

தொகுப்பு:A.அமீர்