Wednesday, November 6, 2013

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

பொள்ளாச்சியில் திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு ‍ 3 இளைஞர்கள் கைது

ஆசிட் விற்பனையை அரசாங்கம் தடை செய்தாலும் ஆசிட் வீச வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதை எப்படியும் பெறத்தான் செய்வான்.

திருட்டு ஒரு குற்ற செயல் என்று அறிவித்து விட்டதால் திருட்டு குறைந்து விடுவதில்லை என்பது போல..



தடை செய்யப்பட்ட எந்த பொருளும், எளிதிலோ அல்லது (பண பலம் கொண்டு) சற்றே சிரமமப்பட்டோ பெறப்படும் வகையில் தான் நமது நாட்டு சட்டங்களின் ஓட்டைகள் அமைந்துள்ளன.

ஒரு பெண்ணை சீரழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்ட ஒருவனுக்கு ஒரு வேளை ஆசிட் கிடைக்கவில்லை என்றால் துப்பாக்கி கிடைக்கும், அதுவும் கிடைக்கவில்லை என்றால் கத்தி, அரிவாள் கிடைக்கும்.

அதே சமயம், இவ்வாறு ஒரு பெண்ணின் உயிரை பறித்தால் உன் தலை இருக்காது என்று சட்டம் இயற்றினால், அவனது கையில் ஆசிடை இலவசமாக கொடுத்தால் கூட அதை பயன்படுத்த மாட்டான்.

இது தான் வேறுபாடு ! இது தான் மனித இயல்பு !!

ஆசிடை இலவசமாக்குங்கள், தண்டனை சட்டங்களை கடுமையாக்குங்கள் !!

Thanks:Nashid Ahmed

Tuesday, November 5, 2013

ஆஸ்திரேலியன் ஆரஞ்சு...... ஆபத்து வந்துருச்சு

கிர்ணிப்பழம் சைஸில் இருந்தது அந்தக் கொய்யாப்பழம். 'இவ்ளோ பெரிசா?’ என வாய் பிளந்தபோது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ஹைபிரிட் கொய்யா!'' என்றார் பழக் கடைக்காரர். 
                                                         
பக்கத்தில், அப்படியே நம் ஊர் கொய்யா சைஸில், கொட்டை இல்லாத கலிஃபோர்னியன் திராட்சை; செக்கச்செவேல் என காபூல் மாதுளை, விதை இல்லாத பெரிய இலந்தை, 'லேத்’தில் அடித்துச் செய்ததுபோல் வார்த்தெடுத்த பளபள பெங்களூரு கேவன்டிஷ் வாழைப்பழம். 
                                                         
விவரம் அறியாப் பழக்கடைக்காரர், ''எல்லாமே நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!'' என்றார். 'இனிப்பு மட்டும்தான் பழத்தின் சுவையா?’ என்ற யோசனையுடன் கொஞ்சம் நகர்ந்தபோது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் ஆஸ்திரேலியன் ஆரஞ்சு கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. 
                                                                 
வழக்கமாக, கொஞ்சம் தொளதொளவென்ற தோலுடன், உரிக்க ரொம்பத் தோதாக இருக்குமே... அந்த கமலா ஆரஞ்சைக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடிவது இல்லை. ஆனால், கமலா ஆரஞ்சு பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லாம் 'கமலா’வுக்கோ, 'கமலாவின் பாட்டி’க்கோ தூரத்து உறவுகூடக் கிடையாது.                  

இப்படி எல்லாமே பெரிது பெரிதாக, கண்களை ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி செய்யப்படும் இவை எந்த அளவுக்கு உடலுக்கும் உழவுக்கும் நல்லது? 'இனிப்புச் சுவைக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத் துப் பிள்ளைங்களைக் கெடுக்காதீங்க... பழம் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப பழங்கள் மேலயும் பழி சொல்றீங்க!’ என்று பதற வேண்டாம். பழங்களைப் பரிந்துரைப்பதன் காரணமே, அதில் நிறைந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் கூட்டு இனிப்பு சேர்த்து சுவைபட அவை வழங்கும் அற்புதமான மருத்துவத் திறனுக்காகத்தான். 

ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு இனங்கள் எத்தனை சத்து நிரம்பியவை? அதிக இனிப்பும், பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே இவற்றில் கிடைக்கும். ஒட்டு ரகங்களின் கூடுதல் இனிப்பைப் பார்த்தால், 'கொஞ்சம் வைட்டமின் தெளித்த மைசூர்பாகு தேவலையோ?’ எனத் தோன்றுகிறது. கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்னைக்கும் உகந்தது என்பதால், மாதுளைக்கு எப்போதும் கனி வகையில் தனி இடம் உண்டு. 

ஆனால், தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையின் இனிப்பு, நம் ஊர் நாட்டு மாதுளையை ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிக்கும் சர்க்கரை வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? மெள்ள உள்வாங்கும் இனிப்புடன், இரும்புச் சத்தையும், நார்ச் சத்தை யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின் சுவையும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுளை, விலை குறைவாக, ஓரமாக இருப்பது வேதனை. 

மதுரை, தேனிப் பக்கம் கொடி கட்டிப் பறக்கும் கொட்டை உள்ள பன்னீர்த் திராட்சையின் உள்ளே இருக்கும் விதைகூட ஆரோக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'மஸ்கட் திராட்சை’ என விவசாயிகளால் அழைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்சையின் கொட்டையில் உள்ள எண்ணெய், இதய நோய்க்கு மருந்து. 'ரிஸ்வெரட்ரால்’ எனும் சத்து நிறைந்திருக்கும் இந்த கிரேப் சீட் ஆயிலுக்கு இப்போது கிரேக்க உலகிலும் வளர்ந்த நாடுகளிலும் ஏக கிராக்கி. ஆனால் நாமோ, 'இதென்ன துவர்க்கிறது’ எனத் திராட்சையைத் தின்றுவிட்டு, கொட்டையைத் துப்புகிறோம். 

புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபோர்னியன் இனிப்பு திராட்சையை நமக்குக் கூடுதல் விலையில் தந்துவிட்டு, திராட்சை விதை எண்ணெயைக் கேப்சூல் குப்பியில் அடைத்து, மருத்துவரை வைத்து மிரட்டிச் சாப்பிடவைக் கிறார்கள். ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பெரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக, பெரிதாக நமக்குள் புகும் சுவைகள், இத்தனை நாள் இருந்துவந்த பழங்களின் பொத்தாம்பொதுவான பயனையும் காலி செய்துவிடுமோ என்று அஞ்சவைக்கிறது. 

உணவின் சத்து விஷயம் இப்படி என்றால், ஹைபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் உரமும், பூச்சிக்கொல்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும்,விலைமதிப்பில்லாத மனித உடலை மாசுபடுத்தும் கேடு இன்னொரு பக்க வேதனை. 

'இத்தனை கோடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப் பக்கம் பறித்து வருவதைவைத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பேசுங்க பாஸ்!’ என இணையத்தில் இதைப் படிக்கும் யாரேனும் திட்டி எழுதக்கூடும். போதாக்குறைக்கு, போன வாரம் நமது பிரதம மந்திரி வேறு, 'விவசாயத்தில் தொழில்நுட்பம் ரொம்ப அவசியம். மேம்போக்காக எதிர்க்க வேண்டாம். விவாதிக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிஉள்ளார். 

நாங்களும் தொழில்நுட்பத்தை மேம்போக்காக எதிர்க்கவில்லை. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள் நோக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல் உன் அனுபவத்தைவிட மேலானது’ என்ற மமதை இன்றி விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விடை மட்டும் தான் சூழலுக்கு இசைவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம் தரும். நாட்டின் இறையாண்மைக்குப் பலம் தரும்; வாருங்கள் விவாதிப்போம்! .

சீக்கிரமே சம்பாத்தித்து சீக்கிரம் அனுபவித்து சீக்கிரமே சாகும் திட்டத்தை செயல்படுத்தும் கார்பரேட்  பணமுதலைகளின் குறுக்கு புத்தி இது.

நன்றி-மருத்துவர் சிவராமன்.

மேலும் அதிக விவரங்களுக்கு...

http://valaiyukam.blogspot.in/2011/04/bt.html


Monday, November 4, 2013

மரபணு மஞ்சள் வாழைப்பழம் -அதிர்ச்சி தகவல்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு  வாழைப்பழமாவது  சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு  மாற்று பெரிய  மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே  வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ்,  தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,  புட் பாய்சன்... என்று கடுமையாக  அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது  இந்த மரபணு மாற்று  மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

 இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.  இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். 
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். 

பூச்சிக் கொல்லிகளை  அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை  என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன்  இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக  விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை. 
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ்  வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
 
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின் டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர். 

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில்  இந்த  பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை   பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது. 

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய  கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. 

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த  பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. 

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே  விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.  ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும். 
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது
 
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது:
 

பெங்களூர் வாழைப்பழம் என்று  விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி.  ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி.  ரக  கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது. இவ்வகை பி.டி.  ரக மரபணு மாற்று  வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்
         
புறக்கணிப்போம் ...புறக்கணிப்போம்...
மரபணு மாற்றுப்பயிர்களை புறக்கணிப்போம்

Saturday, November 2, 2013

வீட்டிற்கு இரு மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம்...இது என்ன வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம் என நினைக்கலாம்.
காலில் சக்கரம் கட்டாத குறையாக மக்கள் ஓடி உழைக்கும் காலம் இது....

அருகில் உள்ள மனிதர்களிடம் பேசக்கூட,உடல் நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் எந்நேரமும் பிசியாக உள்ளனர்...

இவ்வளவு உழைத்தும் இவர்கள் அடகு வைப்பது தம் உடல் நலனைத்தான்...
இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லா வீடுகளிலும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு உள்ளது மலச்சிக்கலும்,மூல நோயும்,
குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினைகள் தான்.....

பதினைந்து வருடத்திற்கு முன்னதாக வீட்டுக்கு வீடு முருங்கை மரமும்,பப்பாளியும் இருந்தது...ஆண்,பெண் ஹார்மோன் பிரச்சினைக்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு கிடைத்தது....

ஆனால் இக்கால மருத்துவர்களால் , இவ்வியாதிகள் பணம் கொட்டும் தொழிலாக பார்க்கப்படுகிறது...2000 ஆண்டு வெறும் 90 கோடி புழங்கிய குழந்தைப்பேறின்மை,ஹார்மோன் பிரச்சினை மருத்துவ உலகில் இப்போது 40 ஆயிரம் கோடி கொட்டும் தொழிலாக உள்ளது...

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே இதற்கு அருமையான தீர்வு இருக்க ரசாயன மருந்துகளில் மக்கள் மயங்கிக் கிடப்பதேன்....???!!!

முருங்கையிலும்,பப்பாளிப்பழத்திலும் சிறந்ததோர் தீர்வு இருக்க வேறென்ன வேண்டும்...???

முருங்கையும்,பப்பாளியும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய மரங்கள்...இவை வளர சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும்.சிலர் இவை இரண்டையும் மொட்டை மாடியில்  கூட வளர்க்கின்றனர்.ஆனால் காய்க்கும் திறன் குறையும்.

நகர்ப்புறங்களில் ஒரு சதுர அடி இடம் கிடைத்தாலும் அதிலும் சிமெண்டை கொட்டி பிளாட்டாக விற்றுவிடுகின்றனர்.பணம் நிறைய சம்பாதித்தும் உடல் ஆரோக்கியத்தை இழந்த வாழ்க்கையினால் என்ன பயன்...???

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்...???!!!

சீக்கிரமே பலன் தரும் அதிக இடம் தேவைப்படாத ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆக வேண்டிய இம்மரங்களினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் கொஞ்ச நஞ்சமல்ல

முருங்கையின் பலன்கள்:

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். 

குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது .
                                                      
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பப்பாளியின் பயன்கள்:-

பழங்களில் சிறந்தது ஆப்பிள் என்பது பொதுவான கருத்து. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் அதைவிட சிறந்த பழம் பப்பாளி. ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு மேலே விற்கும்போது அதைவிட சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த பப்பாளி கிலோ ரூபாய் 40 மட்டுமே. ஆகவே பப்பாளி ஏழைகளின் ஆப்பிள் என்றால் மிகையாகாது.

பழங்களில் மிக மிக குறைவான கலோ¡¢ பப்பாளியில் தான். 100 கிராம் பப்பாளியில் 32 கலோ¡¢களே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
                                                         

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் "ஆரோக்கிய மரம்" என்றும் பழத்தை "ஆரோக்கிய பழம்" என்றும் சொல்கிறார்கள். காரணம் பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன. அதில் "போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ் இரும்பு மற்றும் நார்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்-c மிக மிக அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது. 

நல்ல ஜீரண சக்தியும், ஜீரண கோளாறுகளின் எதிர்ப்பு தன்மையும் இதில் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள "பாப்பின்" எனப்படும் புரதசத்து, குடல் புழுக்கள் உண்டாவதை பப்பாளி தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்சு எ¡¢ச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண் பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.

அண்மையில் மலேசியாவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் தொடர்ந்து 4 வாரங்கள் பப்பாளி சாப்பிட்டால் கொழுப்புச்சத்து 19.2 விழுக்காடுகளும் L.D.L 23.3 விழுக்காடுகளும் குறைகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தகுந்த அளவு பப்பாளி சாப்பிட்டால் இருதய நோய்களிலிருந்து ஓரளவு நம்மை காப்பாற்றி கொள்ளலாம். பாப்பின் எனப்படும் பப்பாளி பழ பால் மருந்துகள் தயா¡¢க்க உதவுகிறது. முகத்தின் பொலிவுக்காக உபயோகிக்கும் பல கீ¡¢ம்களில் பாப்பின் சேர்க்கப்படுகிறது. பொதுவாக தினமும் சில பப்பாளி துண்டுகளை உண்டால் மருத்துவரை நாட வேண்டாம்.

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பெண்களுக்கு தீராத பிரச்னை என்றால் முடி கொட்டும் பிரச்னை தான். தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.


  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தென்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவன் எந் நோயையும் அதற்குரிய 
நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
புகாரி-5678

இவ்வளவு பயன் தரும் எளிதில் கிடைக்க கூடிய இம்மரங்கள் நம் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருப்பது காலத்தின் கட்டாயம்.

வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போமா...???!!!

Sunday, October 27, 2013

தண்ணீர் சிக்கனம்

சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் அத்தியாவசியச்சொத்து தண்ணீரும்,காற்றுமே...

சாப்பாடு இல்லாமல் 3 நாட்கள் வரை வாழும் மனிதன் காற்று இல்லாமல் 5 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.
சுத்தமான காற்றும்,தண்ணீரும் வேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏரி அல்லது குளம் அல்லது அட்லீஸ்ட் சுயநலத்திற்காகவாவது நம் வீட்டிற்கு மட்டும் சேமிப்போம்.

நமக்கு பிறகு நம் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அமைத்து,தண்ணீரை சிக்கனமாக சேமிக்க பழகிக்கொள்வோம்...

மணிக்கணக்கில் பாத்ரூமிலும்,டாய்லட்டிலும் நேரத்தையும்,தண்ணீரையும் வீணடிக்காமல் சேமிப்போம்

http://www.youtube.com/watch?v=IZNTnxhoU1k
http://www.youtube.com/watch?v=9Odg7Twlq1I
http://www.youtube.com/watch?v=u0ghut49oog

இது பருவ மழை நேரம்...இந்நேரத்தில் புத்திசாலித்தனமாய் ஒரு மரமாவது நட்டு மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் அறிவாளியாக இருக்க முயற்சி செய்வோம்.





இல்லையென்றால் இதே நிலைதான் நமக்கும்

Friday, October 25, 2013

சீட்லெஸ் பழங்கள் ???

                                                ஹை பிரிட் சப்போட்டோ


                                                   சீட்லெஸ் திராட்சை


                                 
   
                                                   சீட்லெஸ் நாவல்பழம்


                                                   
                                               
                                                    சீட்லெஸ் மாதுளை
                                                   
                                               
                                                     

                                                     சீட்லெஸ் பப்பாளி

                                                       

மிகக்குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் காண துடிக்கும் பேராசை விவசாயிகளின்  ஊனமுற்ற குறைமாத குழந்தைகள்
போன்றவை தான் இவை ...

ஹைபிரிட் தக்காளீ,ஹைபிரிட் வெங்காயம்,ஹைபிரிட் எலுமிச்சை என எங்கெங்கு காணினும் ஹைபிரிட்டும்,சீட்லெஸ்ஸும் தான் ...

                                                     
விதையில்லா பழங்கள் விளைவிக்கும் முயற்சி பசுமைப்புரட்சிக்கு
பிறகு ஏற்பட்டது...மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

நாவல்பழம்,இலந்தைப்பழம்,ஈச்சம்பழம் எல்லாம் விரும்பி சாப்பிட்ட மக்கள் ஆப்பிள்,ஆரஞ்சு  மட்டுமே உயர்ந்த பழ வகைகள் என தற்போது கருதுகிறார்கள்.

முன்னாடி ஸ்கூல் அருகில் இம்மாதிரியான பழங்கள் விற்கும்.....
இப்ப ஸ்கூல் அருகில் உள்ள கடைகளில் சரம் சரமாக கண்ட கழிய எண்ணெய்களில் இருந்து பொறிக்கப்பட்ட சிப்ஸுகள் தான் கலர் கலரான பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது...

விதைகளையும்,கொட்டைகளையும் நாம் சிறு வயதில் அறியாமல் பழங்களோடு விழுங்கும்போதும்,பறவைகளின் கழிவுகளின் மூலமும் விதை பரவலாக்கம் நடைபெற்றது.

ஆனால்,விதையே இல்லாத பழங்களின் மூலம் விதை பரவலாக்கலை தடுக்கும் திட்டம் திட்டமிட்டு பரப்பபட்டது...இயற்கை மற்றும் நாட்டு வைத்தியம் எல்லாம் மூடத்தனம் என்ற பெயரில் இயற்கையாக நம் ஊரிலேயே கிடைக்கும் பழங்களை,தானியங்களை சாப்பிடுவது பத்தாம்பசலித்தனமாக காட்டப்பட்டு...நமக்கும் சற்றுப்பொருந்தி வராத குளிர்பிரதேச பழங்கள்,தானியங்கள் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என ஆங்கில மருத்துவர்களால் பாடம் கற்பிக்கப்பட்டது.

சீட்லெஸ் பழங்களை உண்ணும் நாம் எதை வைத்து மரத்தை நடுவோம்???
நம் சந்ததிகளுக்கு வெற்று பூமியை விட்டுச்செல்லப்போகிறோமா..???
புறக்கணிப்போம்....சீட்லெஸ் பழங்களை....!!!
ஆதரிப்போம் இயற்கை விவசாயத்தை...!!!

உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;
குர் ஆன் 2:195

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்;

குர் ஆன் 6:95

Monday, October 14, 2013

தியாகத்திருநாள்......என்ன படிப்பினை பெற்றோம்....???

குர்பானி கொடுத்து இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு 
கூறும் நன்னாள்...

எத்தனையோ தியாகத்திருநாளை நாம் கடந்தாலும்,தினமும் இப்ராஹீம் நபியின் அருளும்,பரக்கத் வேண்டி பிரார்த்தனை செய்தும் இன்னும் நம்மிடம் அற்ப குணங்களான பிடிவாதமும்,முன் கோபமும் நம்மை பிடித்துக்கொண்டு விடாமலே இருக்கிறது.
                                             

இப்ராஹீம் நபியிடமும்,அவருடைய மனைவியிடமும்,அவருடைய பிள்ளையிடமும் எவ்வளவு அழகிய முன்மாதிரி உள்ளது.....

பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் எப்படி ஒரு முன்மாதிரிக்குடும்பத்தை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்......!!! சுபுஹானல்லாஹ்...

நம்மில் எத்தனை பேர் முன்மாதிரி முஸ்லிம் குடும்பமான இப்ராஹீம் அலை அவர்களின் குடும்பத்தைப்பற்றி நம் இல்லங்களில் பேசியிருப்போம்...விவரித்திருப்போம்...

தந்தையின் தியாகம் எப்படிப்பட்டது....

தாயாரின் தியாகம் எப்படிப்பட்டது...

பிள்ளையின் பொறுமையும்,தியாகமும் எப்படிப்பட்டது......

நம் வீடுகளிலே அதிகம் பேசப்பட வேண்டிய அழகிய முன்மாதிரிகள்...

ஒரு இஸ்லாமியக்குடும்பம் செய்த தியாகம் இந்நன்னாளில் நினைவு கூறப்பட்டு நம்மிடையே அத்தியாகச்செயல் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.....

நம்முடைய தவறுகள்,பிழைகள் களையப்பட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்ள உறுதிமொழி எடுக்க வேண்டும்

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.9:114

ஒவ்வொரு இல்லத்தின் அங்கத்தினரும் பொறுமையையும்,இரக்க குணத்தையும் இந்நன்னாளில் அதிகமாக வளர்த்துக்கொள்வோம்...

திடல் தொழுகையில் குடும்பத்தோடு பங்கேற்று பெருநாள் உரையை கேட்டு 
நம்மிடையே இரக்க குணமும்,பொறுமையும் அதிகமாக இறைவனிடம் துஆ செய்வோம்...

பெண்கள் பெருநாள் அன்று காலை சமையலை எளிமையாக செய்துவிட்டு பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள ஆர்வமாக செல்லுங்கள்...வீட்டிலோ,பெண்கள் சேர்ந்து தொழுவதை தவிர்த்துவிட்டு திடலில் தொழுது நபிவழியை உயிர்ப்பிக்கவும்...

தயவு செய்து அடுப்பங்கரையில் குடி இருக்காமல் பெருநாள் உரையை கேட்டு பயனடையவும்....
________________________________________________________________________________
திடல் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்...

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும்

 “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.