Monday, August 19, 2013

முகநூலை இப்படியும் பயன்படுத்தலாம்


மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், நகராட்சி எடுக்கும் முடிவுகளில் மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அறிவதற்கும் முகநூலை ஓர் கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், அதிமுகவைச் சேர்ந்த தேவகோட்டை நகராட்சித் தலைவர் சுமித்ரா ரவிக்குமார்.

இவர் எப்படியெல்லாம் முகநூலைப் பயன்படுத்துகிறார்?
                           



              
தேவகோட்டை தினசரி மார்க்கெட்டின் பின்புறமாக, புதிதாக பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி முடிவு செய்தது. அதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, புதிய மார்க்கெட் அமைப்பது குறித்து மக்களின் கருத்துக்களை முகநூல் மூலமாகக் கேட்கிறார் நகராட்சித் தலைவர். தண்ணீர் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பொதுசுகாதாரம் போன்றவை தொடர்பான தகவல்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுத் தகவல்களையும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கான நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.

பொது சுகாதாரம் உட்பட நகராட்சி தொடர்புடைய பிரச்சினைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே நகராட்சித் தலைவருக்குப் புகார் அளிக்க முடிகிறது. அந்தப் புகார் மீது நகராட்சித் தலைவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேவகோட்டை தியாகிகள் சாலையில் ஓர் இடத்தில் மணல் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுக் கிடந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது மட்டுமல்லாமல், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பலர், இடறி விழும் அபாயமும் இருந்தது. இது பற்றி நகராட்சித் தலைவரின் முகநூலில் காலை 7 மணி அளவில் புகார் செய்தேன். அதற்கு, 9.30 மணிக்கு நகராட்சித் தலைவர் பதில் அளித்திருந்தார். ‘உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளிக்கிழமைக்குள் அங்கிருந்து மணல் மற்றும் கற்கள் அகற்றப்படும்’ என்று தலைவர் கூறியிருந்தார். உடனடியாக அவர் பதிலளித்தது எனக்கு மன நிறைவை அளித்தது.சொன்னபடியே நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அலைந்து திரியாமல், அலைக்கழிக்கப்படாமல் என் கோரிக்கை நிறைவேறிவிட்டது" என்கிறார், தேவகோட்டையைச் சேர்ந்த மோகன்குமார்.

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் புகார்களை முகநூலில் பதிவு செய்துவருகின்றனர். முகநூலில் மட்டுமின்றி, செல்பேசி எண்களைத் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குடிநீர், தெருவிளக்கு, குப்பைகள் என ஒவ்வொரு புகாருக்குமான தனித்தனி செல்பேசி எண்கள் முகநூலில் தரப்பட்டுள்ளன (Chairman of Devakottai என்ற பெயரில் கணக்கு உள்ளது).



இதற்குமுன் நான் முகநூலை அதிகமாகப் பயன்படுத்தியது இல்லை. ஆனால், அதன் பயன்பாடுகள் குறித்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, நகராட்சி தொடர்புடைய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும் முகநூலைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை வந்தது. கடந்த டிசம்பர் 25 அன்று முகநூல் கணக்கைத் தொடங்கினேன். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார், சுமித்ரா ரவிக்குமார்.

-ஆ.பழனியப்பன்

Sunday, August 18, 2013

நுகர்வோர் வெறி.....

சில பல வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு மாதா மாதம் தேவையான பொருட்களை ஒரு பேப்பரில் எழுதி கடைக்கு சென்று நமக்கு தேவையான
பொருட்களை மட்டும் வாங்கும் பழக்கம் நம்மிடம் இருந்தது.....

நம்முடைய அம்மாக்களிடம் இருந்த சிக்கனம்,
அவசியம் இருந்தால் மட்டுமே வாங்கும்  நல்ல பழக்கங்களை எல்லாம்
நம்மிடம் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது....

நம் வீடுகளில் பல வருடங்களுக்கு முன் 2 சேர் இருக்கும்....
ஒரு பீரோ இருக்கும்....கட்டில் இருக்கும்....
வீட்டுக்கு தேவையான பொருள் மட்டுமே நம் வருமானத்திற்கு
தக்கபடிவாங்கும் பழக்கமும் நம் பெற்றோரிடம் இருந்தது.....

கடந்த 10 ஆண்டுகளில் டிவிக்களில் விளம்பரங்கள் மூலம் எதையெல்லாம்
பார்க்கிறோமோ அதை கண்டிப்பாக வாங்கியே ஆகவேண்டும் என்ற வெறி
நமக்கு தூண்டப்படுகிறது...

சாதாரணமான வெறி எல்லாம் அல்ல அது.....
திட்டமிட்டு பரப்பட்ட மூளைச்சலவை அது....

பக்கத்து வீட்டில் புதிதாய் சேலையில் இருந்து பர்னிச்சர் வரை எது வாங்கினாலும் அதை வாங்கியே ஆக வேண்டும் என குடும்ப பெண்களின் எண்ண ஓட்டம்....

உடன் படிக்கும் மாணவன் விலை உயர்ந்த செல்போனோ அல்லது புதிதாக வந்த ஐபாட்,ஐபேட் என லொட்டு லொசுக்கு சாமான் எதுவாக இருந்தாலும் அது தனக்கு தேவைப்படவில்லையென்றாலும் தனக்கு அந்த அளவுக்கு பொருளாதார வசதி இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது அதுவும் இல்லையென்றால் திருடியாவது அப்பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் இளம்வயதினரிடையே அதிகரித்துள்ளது....

சிலருக்கு எந்த பொருளைப்பார்த்தாலும்
அது தனக்கு தேவையோ இல்லையோ வாங்கியே ஆகவேண்டும்...
அதைப்போன்ற ஒரு பொருள் வீட்டில் இருந்தாலும் வீடு முழுதும்
நிரப்பி வைக்கும் பழக்கம் இருக்கும்...
சில வீடுகளில் எங்கு பார்த்தாலும் பர்னிச்சர் அயிட்டங்களாக வைத்து இருப்பர்....இதுவும் ஒருவகை என மனநோய் உளவியல் அறிஞர்கள்கூறுகின்றனர்......

விழாக்கள்,பண்டிகைகள் என்ற பெயரில்
விழாக்கால சலுகை,10%முதல் 50%வரை தள்ளுபடி....

ஒரு வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்ற காலம் எல்லாம்
மலையேறி இரண்டு பொருள்,மூன்று பொருள் இலவசம் கொடுக்கும்
காலத்தில் இருக்கிறோம்....

எதையெடுத்தாலும் 30 ருபாய் என்று எங்கெங்கு காணினும்
தேவையற்றபொருளை விற்க வியாபார தந்திரங்கள்.
பெருகி உள்ள சாப்பிங் மால்கள் நம்மை தேவைக்கு அதிகமானதை,
ஆடம்பரமான,தேவையற்ற பொருளை வாங்க தூண்டுகின்றன.

ஒரு விசயத்தை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் அது தவறாக
இருந்தாலும் மனித மூளை ஏற்றுக்கொள்ளகூடிய நிலை ஏற்படுகிறது.
அதுபோலவே நாம் காணும் விளம்பரங்கள் இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என்று கூவி கூவி அழைத்து கடன் வாங்கியாவது அல்லது தவணை
முறையிலாவது வாங்கியாக வேண்டிய வெறியை ஏற்படுத்துகிறது...

இலவசமாக பொருளைக் கொடுப்பவரோ அப்பொருளை சும்மா ஒன்றும் கொடுப்பதில்லை...அதன் விலையையும் நம் தலையில் சேர்த்து வைத்தே மிளகாய் அரைக்கிறார்......

இந்த இலவச வெறி....
வியாபாரம் செய்வோரிடம் இருந்து அப்படியே
நாட்டை ஆள்வோரிடம் வந்ததுதான் வினையே.....
வியாபாரியாவது மக்கள் கூட்டம் அலைமோததான் அப்படி பண்ணினார் என்றால் இந்த அரசியல் பண்ணுறவங்க எதுக்கு இலவசம் கொடுக்கிறாங்கனு நம்ம மக்கள் யோசிச்சாங்களா??இல்லை....

கண்டிப்பாக இலவசமாக கொடுக்கப்படும் பொருள் தரமாக இருக்காது,
நீடித்து உழைக்காது என்று தெரிந்தும் வாங்குபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
                               
சில பெண்களுக்கு கடைகளில் ஏதாவது பிளாஸ்டிக் பொருட்களைப் பார்த்தால் ஆசை வந்துவிடும்....உடனே வாங்கி வீடெல்லாம் நிரப்பிவிடுவர்...
இது பர்ஸுக்கு ஆபத்து....மனதுக்கும் ஆபத்து என்று உணர்ந்து இப்பழக்கத்தை விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Saturday, August 17, 2013

பேசும் படம்

                                                                                                                                                                                         
                                                                             
 












 

பகுத்தறிவு இல்லாத ஆடு மாடு பன்றி கூட தனக்கு தீங்கு தருபவற்றை பயன்படுத்தாது....???

ஆனால்,சிந்திக்கும் திறன் உடைய மனிதன் தன் கைகளாலேயே

தனக்கு தீங்கை தேடிக்கொள்கிறான்

Monday, August 12, 2013

இவரை தெரியுமா???

இவரை தெரியுமா????

பெற்ற தந்தை எதிரி..ஊர் மக்கள் கொலை செய்யத்துணிந்தார்கள்....
தன்னந்தனியாக தனித்து விடப்பட்ட வாழ்க்கை....
மனைவியையும்,பிள்ளையும் பிரிந்து மீண்டும் தனிமை வாழ்க்கை

பெற்ற பிள்ளையைக் கொண்டும் சோதனை....
இவரை விடவா நீங்கள் சோதிக்கப்பட்டீர்கள்.






இவரையும் தெரிந்துகொள்ளுங்கள்....

பெற்ற தந்தையை பார்த்ததுமில்லை... விவரம் அறியா வயதில் தாயின் இழப்பு.. தாய்,தந்தையின் அரவனைப்பு இல்லாததை விட கொடுமை இவ்வுலகில் உண்டா

சிறு வயதிலேயே ஆடு மேய்த்து தன் உறவினர் வீட்டில் வளர்ந்தவர்...
தன் இருமகள்கள் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்யப்பட்டதையும் தாங்கிக்கொண்ட அஞ்சா நெஞ்சர்

தன் ஆறு பிள்ளைகளில் ஐந்து பிள்ளைகள் தன் கண் முன்னே இறக்கக் கண்டவர்சொந்த வாழ்க்கையில் ஆயிரம் சோதனைகளைக்கண்டாலும் மக்களுக்காக உழைத்த,மக்களின் உள்ளங்களில் வாழும் ஒரே தலைவர்.

முன்னவர் இறைத்தூதர் இப்ராஹீம் பின்னவர் இறைத்தூதர் முஹம்மது இவ்விருவரும் சமூகத்தை சீர்திருத்த அனுப்பப்பட்ட சீர்திருத்தவாதிகள்.

இவ்விருவரின் புகைப்படமோ,விடியோக்களோ இல்லாத நிலையிலும் மக்களால் பின்பற்றக்கூடிய மனிதருள் சிறந்தவர்கள்.

இறைத் தூதர்களும் சோதனைக்கு அப்பார்ப்பட்டவர்கள் இல்லை என்பதை அவர்களுடைய வாழ்க்கையே நமக்கு உணர்த்தும் மிகச்சிறந்த பாடமாகும்.

Thursday, August 8, 2013

அர்த்தமுள்ள பெருநாள்....

இறைவனின் அமைதியும் அருளும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்....

பல ரமலான் களையும்,பெருநாட்களையும் சந்தோசத்துடன் கடந்த நாம் அவையெல்லாம் நம்மை எந்த அளவு சீர்திருத்தியுள்ளது என சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது....


நேற்றுவரை பஜ்ரை நேரத்துடன் தொழுதோம்...இன்று....???நாளை....???

நேற்றுவரை குர் ஆனை ஆர்வத்துடன் ஓதினோம்....இன்று....????நாளை....???

நேற்றுவரை வீண் பேச்சுகள்,பொய்,புறம்,கோள்,சண்டையிடுவதை தவிர்த்தோம்...நான் நோன்பாளி என்று எம்மை தடுத்துக்கொண்டொம்....
இன்று ....? நாளை...?

சிகரெட் பிடிப்பதை ரமலானில் தடுத்துக்கொண்ட உள்ளங்கள் இன்றும் நாளையும் ஊதித்தள்ளினால் நோன்பினால் என்ன பயன்....???

நேற்றுவரை தான தர்மங்களை அதிகமாக்கினோம்.....
இன்று....???
நாளை.....???

நேற்றுவரை சினிமாப்பாடல்களை பார்ப்பதை,கேட்பதை தவிர்த்தோம்...
இன்று ....???
நாளை....???

இத்தகைய காரியங்களை இனிமேல் செய்யாமல் இருப்போம்....
இன்றும் நாளையும் பள்ளிக்கு சென்று தொழ வேண்டும் என உறுதி எடுப்போம்

பெருநாள் என்பது புத்தாடை உடுத்தி,பிரியாணி சாப்பிடும் சடங்கு அல்ல...
நம்முடைய தவறுகளை சரிப்படுத்தி,அமல்களை சீராக்கி புத்தம் புது மனிதனாக ஆக்கும் அர்த்தமுள்ள நாள் ஆகும் ...


நான் சந்தித்த என்னுடைய இப்பெருநாள் அர்த்தமுள்ள நாளா....???!!!
                 

சிந்திப்போம்...செயல்படுவோம்...!!!! 

Sunday, July 21, 2013

புதுமைப் பண்ணை


எந்தவொரு வேலையையும் முழு ஈடுபாட்டோடு செய்யும்போது, அதன் சூட்சுமங்கள் நமக்கு எளிதில் பிடிபட்டுவிடும். பாரதியும் இயற்கையை நேசித்து, விவசாயத்தை ஈடுபாட்டோடு செய்ததால் அதில் பல புதுமைகளையும் தொழில்நுட்பங்களையும் புகுத்தியிருக்கிறார்.

 ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசான ஃபுபுகோகு தன்னுடைய பண்ணையைப் பற்றி கூறுகையில், ஜப்பானிலே 25 ஆண்டுகளாக உழாமல் பயிரிடப்படும் பண்ணை என்னுடையது மட்டுமே. ஏனெனில், நான் இயற்கையோடு இணைந்தே விவசாயம் செய்கிறேன். காடுகளை யாரும் உழுவது இல்லை, மண்புழு தவிர. இலை, தழை தவிர அவற்றிற்கு வேறு உரங்கள் இல்லை. அதுபோலவே எனது பண்ணையையும் மண்புழுக்களே உழுகின்றன. இலை, தழைகளே உரமாகின்றன. ஆனாலும் மற்றவர்களைவிட நான் அதிக மகசூல் எடுக்கின்றேன்..." என்கிறார்.

அந்த ஜப்பானிய விவசாயியைப் போலவே இயற்கையோடு இணைந்த ஒரு பண்ணையை உருவாக்கியிருக்கிறார் பாரதி. திருவாலங்காட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது இவரது இயற்கைப் பண்ணை. இயற்கையை நேசித்ததால், தான் நடத்திவந்த தொழிலகத்தை விட்டுவிட்டு, 2000-ஆம் ஆண்டில் துவங்கியதுதான் இந்தப் பண்ணை. பாரதியிடம் பேசியபோது, இப்போதெல்லாம் நமது பிள்ளைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் சாப்பிடாமல் வளர்வது இல்லை. ஆனால், எனது பிள்ளைகளுக்கு (இவர் தோப்பில் உள்ள மரங்களை பிள்ளை என்றே அழைக்கிறார்) யூரியா என்றால் என்ன, பொட்டாஷ் என்றால் என்ன என்றே தெரியாது. ஏனெனில், நான் பண்ணையை ஆரம்பித்த நாள் முதலே இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். என்னிடம் மொத்தம் 20 மாடுகள், 300 ஆடுகள், 250 கோழிகள், 5 கழுதைகள், 1 ஒட்டகம், 2 குதிரைகள், 50 வாத்துகள், வான்கோழி, சண்டைக்கோழி, மயில் போன்றவை அடங்கிய ஒரு விலங்குகளின் சரணாலயம் உள்ளது.

பறவைகளை சுதந்திரமாக விட்டுவிடுகிறேன். அவற்றை நான் கூண்டுகளில் அடைப்பதில்லை. பண்ணை வேலைகளை அவைகளே செய்துவிடுகின்றன. ஆடு, மாடுகளை பண்ணைக்குள் ஓட்டிச் செல்லும்போது, அவை மேய்ந்து களைகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் கழிவுகளை அங்கேயே விட்டு விடுகின்றன. இதனால், தனியாக உரமிட வேண்டிய அவசியம் இல்லை. கோழிகளும் வாத்து மற்றும் மற்ற பறவைகளும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இப்படி முக்கிய வேலைகளை எல்லாம் அவைகளே பார்த்துக் கொள்வதால், பல ஏக்கர் பரப்பளவு உள்ள பண்ணையை இரண்டே பேர் மட்டுமே பார்த்துக் கொள்கிறோம். மாம்பழ அறுவடை காலங்களில் மட்டும் கூடுதல் ஆட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறோம்..." என்கிறார்.

இவரது தோப்பில் செந்தூரம், அல்போன்சா, காளப்பாடி, ருமானி, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, பத்தரசம், செருகுரசம், ஜவ்வாரி, நீலிசா, மல்லிகா, பெங்களூரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மா வகைகள் மற்றும் சப்போட்டா, நெல்லி, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழ வகைகளும் குமிழ், மகாகனி, செந்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி, ருத்ராட்சம், சந்தனம் போன்ற விலையுயர்ந்த 100 அரிய வகை மரங்களும் உள்ளன. தற்போது, மின்சாரம் மட்டுமே வெளியில இருந்து வருகிறது. அதற்கும் 5 ஹெச்.பி. மோட்டார் இயங்கக் கூடிய வகையில் சூரிய மின்கலன் ஒன்றை அமைத்துள்ளேன். இதை விரிவு செய்யும் திட்டமும் உள்ளது. அதை நிறைவேற்றும் பட்சத்தில் நாங்கள் வெளியில் இருந்து எதுவும் வாங்க வேண்டியிராது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, ஸ்டைலா, அகத்தியும் உள்ளேயே பயிரிடப்படுவதால் எங்கள் பண்ணை ஒரு தற்சார்புப் பண்ணை..." என்கிறார் இவர்.


தொடர்புக்கு: பாரதி - 99400 17635

Saturday, July 13, 2013

இஸ்லாமியப் பார்வையில் பெண்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....

பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என ஊடகங்களிலும்,
தினசரிகளிலும் அறியாதோர் ஆயிரம் கட்டுக்கதைகளும் எழுதினாலும்....
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அது ஒரு துளி அளவு கூட பாதிப்பை
ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.....!!!!

முஸ்லிம்கள் பெண்களை மூடி வைத்து
கொள்கின்றனர் என விதண்டாவாதம் பேசுவோர்.....
மனிதனுக்கு அழகிய வழியை மட்டும் காட்டும் இஸ்லாம்
என்னும் அழகிய மார்க்கத்தில்,
ஒரு மனிதன் தன் தாய்க்கு பணி விடை செய்வதன் நல்ல முறையில்
நடந்து கொள்வதின் மூலமாக சொர்க்கம் செல்கிறான் என்ற நபிகளாரின் பொன் மொழியை படித்துப்பார்த்ததுண்டா...???

ஒரு பெண் குழந்தை பிறப்பில் இருந்து மரணிக்கும்வரை தன் வாழ்வில் அவளை நன்முறையில் நடத்தவேண்டும் எனவும் ....
அவர்களுடன் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால்
அநீதம் இழைத்தால் அவன் அதை பற்றி கடுமையாக விசாரிக்கப்படுவான் என்று அச்சமூட்டி எச்சரித்த மார்க்கம் இஸ்லாம் தவிர வேறு ஏதும் உண்டா...???

ஒரு முஸ்லிம் ஆண்...தன் குடும்பத்தில் உள்ள பெண்களான
தாய்,சகோதரி,மகள்கள்,மனைவியிடம் நல்ல முறையில் நடந்து
கொள்வது அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காரியம் என
போதித்த மார்க்கம் இஸ்லாத்தை தவிர வேறு ஏதும் உண்டா....???

தாயைப்பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்...

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
அல் குர் ஆன் -31:13.

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
அல் குர் ஆன் -46:15.

இப்படிப்பட்ட தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது .
நசயீ- 3104,அஹ்மத்15475.
என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ  இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....

இன்னொரு ஹதீஸில் பெற்றோரை பேணாதவனின்
மூக்கு மண்ணை கவ்வட்டும் என அண்ணலார் எச்சரித்துள்ளார்கள்.

நம்முடைய வாழ்நாளில் நாம் எத்தனையோ
உறவையும்,நட்புகளையும் கடந்து வந்தாலும் நம் தாய்....தாய்....
தாயை தவிர வேறு யாரும் நம்மை 10 மாதம் சுமக்கவில்லை .....!!!

20 வயது வரை இடி விழுந்தாலும் தூக்கத்தில் எழாத அப்பெண் திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு மழலையின் அழுகுரல் க்ரீச் என கேட்டதும் தூக்கிவாறிப்போட்டு எழுவாள் தெரியுமா.....அதுவே தாய்ப்பாசம்...

தன் தூக்கத்தை தியாகம் செய்து குழந்தையை தாலாட்டுவாள்....
தன்னை அலங்கரிக்க மறந்து குழந்தையை அலங்கரித்து
கண் குளிர்ச்சி அடைவாள்.......
பசி வரும் நேரம் குழந்தை அழுதால் தன் பசி மறந்து
குழந்தைக்கு அமுதூட்டுவாள்.....
தன் குழந்தையின் அசுத்தததை  முகம் சுளிக்காமல்
இரவும்,பகலும்  சுத்தம் செய்வாள்....

நமக்காக,....நமக்கே.....நமக்காக இத்தனை பணிவிடையும் செய்யும் சுயநலமில்லாத ஒரு நபர் இவ்வுலகத்தில் உண்டா........???

அல்லாஹ்வின் அன்பு 70 தாய்களின் அன்புக்கு சமமானது
என தாயின் அன்பையே உதாரணமாக கூறுகிறான் என்றால்....
சுபுஹானல்லாஹ்....சொல்ல வார்த்தைகளே இல்லை......

இத்தனை தியாகமும் நம் வாழ்நாளில் செய்யக்கூடிய ஒரே
மனுஷி தாய் மட்டுமே!!!

இந்த தாயிடமும்,தந்தையிடமும் எப்படி நடக்க 
வேண்டுமென அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....!!!

இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை 
அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக;அல் குர் ஆன் -17:24.

ஆனால்,நாமோ.....ஆசிரியரிடம் கை கட்டி பணிவாக நிற்கிறோம்...
பெற்றோரிடம் அவ்வாறு பணிவோடு நடப்பதில்லை.....

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்;-

நான் கேட்டேன்:இறைவனின் தூதரே!!!பெண் மீது யாருக்கு
                                  அதிகமான உரிமை இருக்கின்றது?”

அண்ணல் நபிகளார் கூறினார்கள்: அவளுடைய கணவனுக்கு’.

நான் கேட்டேன்: ஆண் மீது யாருக்கு அதிகமான உரிமை இருக்கின்றது?’’

அண்ணல் நபிகளார் விடையளித்தார்கள்;அவனுடைய தாய்க்கு’’
ஹாகிம்-7244

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து,
இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.
புகாரி-5971.

அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். புகாரி-5975.

இதெல்லாம் தாயைப் பற்றி இஸ்லாம் கூறியுள்ள உயர்வான கருத்துக்கள்.

இன்னும் தாய்க்கு அடுத்து  ஒரு ஆண் தன் வாழ்க்கையில்
சந்திக்கும்  மிகவும் அதி முக்கியமான நபர்....மனைவி....

மனைவியின் அருமையை பற்றி குர் ஆன் கூறும் செய்தியை பார்ப்போமா???

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல் குர்ஆன்- 30:21.

மனைவியை பற்றி அல்லாஹ் மன அமைதி என்றும்
சிந்தித்து உணரக்கூடிய அத்தாட்சி எனக்கூறுகிறான்....

திருமணத்திற்கு முன் வரை விளையாட்டு பிள்ளையாய் இருக்கும்
பெண் திருமணம் செய்த பின் தன் சொந்த பந்தங்களை எல்லாம்
விட்டு விட்டு கணவனின் மீது உள்ள பாசத்தால் கசிந்துருகி
கணவனை மிக உயர்வான இடத்தில் இருத்தி அவனுக்காகவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள்....

அப்படிப்பட்ட பெண் ஏதேனும் சில விசயங்களில் கருத்து வேறுபாட்டுடன் நடந்தால் அம்மனைவியிடம் எப்படி நடக்க வேண்டும் என அல்லாஹ் கணவனுக்கு இடும் கட்டளையை பாருங்கள்....

அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
அல்குர் ஆன் -4:19.

இன்னும்,இவ்வுலகத்தில் மனிதனுக்கு கிடைக்கும் மிக
சிறந்த பொக்கிஷமென அண்ணலார் கூறுவது நல்ல மனைவியை......

இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களில்
மிகவும் மேலானது நல்ல மனைவியே......
முஸ்லிம்-2911.

இரண்டு மனைவிகள் உடைய கணவனுக்கு
வல்லோன் இடும் கட்டளையை பாருங்களேன்....
பெண் மீது ஆண் கொடுமை இழைக்காதிருக்க இறைவன் அநியாயத்தின் அத்தனை வாசல்களையும் தன் வசனத்தின் மூலம் அடைத்து விட்டான்....

முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அல் குர் ஆன் -4:129

இதைப்பற்றி அண்ணலார் கணவனுக்கு இடும்
எச்சரிக்கையை பாருங்களேன்....

யாருக்கேனும் இரண்டு மனைவியர் இருந்து,
அந்த இருவருக்கும் இடையே நேர்மையாக நடக்கவில்லையானால்,
ஒரு பக்கம் சாய்ந்தவனாக மறுமையில் வருவான்.
அபூதாவூத்,நஸயீ,இப்னுமாஜா.

இன்னும் மனிதர்களில் சிறந்தவர் யார் என அடையாளம்
காண அண்ணலார் சொல்லும்  அளவுகோல் என்ன தெரியுமா???
மனைவியடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமாம்....!!!..ஆம்..!!

உங்களில் எவர் தம் மனைவியிடம் நல்லவராக 
இருக்கின்றாரோ அவர்தாம் உங்களில் நல்லவர்.
திர்மிதீ-1195.

ஒரு ஆண் தன் நண்பர்களிடத்திலோ,வேலை பார்க்கும் இடத்திலோ நல்ல மனிதனாக காட்டிக்கொள்ள முடியும்....ஆனால்,மனைவி மட்டுமே அவனை சரியாக அளக்கும் அளவுகோல் என அண்ணலார் அருள்மொழி பகிர்ந்துள்ளார்கள்...

இன்னும் அவனுக்கு பிறக்கும் பெண் குழந்தையை
நற்செய்தி என்று சிறப்பித்து சொல்வதும்....
நேர்வழி காட்டும் இஸ்லாமே..................

இரண்டு பெண்மக்களை பெற்றவருக்கும்,மூன்று பெண்மக்களை பெற்றவருக்கும் அண்ணலார் கூறும் நற்செய்தி இதோ.................

 “எவர் இரு பெண் மக்களை வளர்த்து பரிபாலித்து வந்தாரோ,அவரும் நானும் இணைந்து  இந்த  இரு விரல்களைப் போல் சொர்க்கத்தில் நுழைவோம்”என்று நபி ஸல் அவர்கள் தமது இரு விரல்களை சுட்டிக்காட்டினார்கள்.
#திர்மிதி-191.

“எவருக்கு 3 பெண் மக்கள் அல்லது 3 சகோதரிகள் அல்லது 2 பெண் மக்கள் அல்லது 2 சகோதரிகள் இருந்து அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹ்வை பயந்து நடந்தால்,அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
#திர்மிதீ-1916.

ஆண் பிள்ளைகளுடன் பெண் பிள்ளைகளை பாரபட்சம் காட்டும் ஆணுக்கு இஸ்லாம் கூறும் எச்சரிக்கை என்ன தெரியுமா....???

“எவருக்கு பெண்  குழந்தை பிறந்து அவர் அதை (அறியாமைக்காலத்தில்  செய்தது போல்)  உயிருடன் புதைக்காமல்,அதை இழிவாக கருதாமல்(அவர்களுடன்  பழகுவதில்) பெண் பிள்ளையை விட  ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை தராமல்,(மகனுடன் நடந்து கொள்வது போலவே மகளுடனும்) நடந்தார் என்றால்,மகளுடன் நடந்து கொண்ட முறைக்கு  பிரதிபலனாக  அல்லாஹுத்த ஆலா  அவரை சுவர்க்கத்தில் நுழைய வைப்பான்”
#ஹாகிம்-177.

எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு இரு பெண் மக்கள் இருந்து இவர் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து அவ்விருவரும் இவரிடத்தில் இருக்கும் வரை,அல்லது இவர் அவர்களிடத்தில் இருக்கும் வரை அவ்விரு பெண் மக்களும் இவரை நிச்சயம் சொர்க்கத்தில் நுழைய வைப்பார்கள்.
#இப்னு ஹிப்பான்- 207.

பெண் குழந்தையுடன் நல்ல முறையில் நடக்கும் ஆணுக்கு சொர்க்கம் என நற்செய்தி சொல்வது அழகிய மார்க்கமான இஸ்லாம் மட்டுமே ஆகும்...

இன்னும் ஒரு சகோதரியை பொறுப்பேற்றுக்கொள்ளவே யோசிக்கும் சுயநலமிக்க உலகத்தில் இரண்டு அல்லது மூன்று சகோதரிகளுக்கு உணவளித்து  பொறுப்பேற்று கொள்ளும் ஆணுக்கு சொர்க்கம்
என நற்செய்தி சொல்வதும் இஸ்லாம் மட்டுமே.............

இன்னும் தன் குடும்பத்திற்கு மட்டும் உழைக்கும் சுயநல ஆண்களுக்கு மத்தியில் விதவைப்பெண்ணுக்கும்,ஏழைக்கும் உதவி செய்யும் ஆணுக்கு
ஜிஹாதின் நன்மை கிடைக்கும் என ஆர்வமூட்டுவதும் இஸ்லாம் மட்டுமே...!!!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்.
புகாரி-6006

பெண் தாயாகவும்,மனைவியாகவும்,மகளாகவும் இருக்கும்போது அவளுக்கு கிடைக்க கூடிய உரிமைகள்,சலுகைகள் வேறு எந்த மதத்திலோ,இனத்திலோ
இல்லை....

இன்னும் அண்ணல் நபி ஸல் அவர்கள் தனது இறுதிப்பேருரையில் மிக மிக வலியுறுத்தி சொன்ன வாசகம் இவை.........

“பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள்”.
                                             
ஆம்............ஆணுக்கு இறைவன் கொடுத்த  மிகச்சிறந்த சொத்து பெண்......
வாழ்க்கைத்துணை  ........கண் குளிர்ச்சியாம்.........
மகள் நற்செய்தி.........
சுபுஹானல்லாஹ்...........
பெண்ணை இதற்கு மேல் உயர்த்தும் சித்தாந்தம்
எங்கும் எங்கும் எங்குமே................ இல்லை....

ஆண் தன் தாய்க்கு சிறந்த மகனாக நடந்து
கொள்ளும்போது அவன் சொர்க்கம் செல்கிறான்.......

தான் பெற்ற மகளுடன் சிறந்த தகப்பனாக நடந்துகொள்ளும்போது
அவன் செயல் சொர்க்கம் செல்லும் சாதனமாக உதவுகிறது.....

இன்னும்,முஸ்லிமின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்
பள்ளிவாசல்களில் உள்ள மிம்பர் பற்றிய ஆலோசனை சொன்னது
ஒரு பெண் என தெரியுமா........???

இன்று உலகெங்கும் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள மிம்பர்
ஒரு பெண்ணின் ஆலோசனையால் நபிகளாரால் அங்கீகரிக்கபட்டது
எனும் செய்தியை பாருங்கள்.......!!!

அந்த மிம்பர் படிகளின் மீது நின்றுதான் ஜும் ஆ உரை நிகழ்த்தப்படுகிறது...

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்... அல்லது பேரீச்ச மரத்தின்.... (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி...., 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)" என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரைமேடைக்குச் சென்றார்கள்.
புகாரி-3584.

பெண்ணை அடிமைப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் என சொல்லும்
மூடர்கள் பெண்ணை ஆண் சொர்க்கம் செல்லும் சாதனமாக ஆக்கி
பெண்ணை சிறப்பித்த இஸ்லாமிய மார்க்கத்தை அகக்கண் கொண்டு
படித்து நேர்வழி பெற வல்லோனை பிரார்த்திக்கிறேன்.