Sunday, February 8, 2015

புனித குர் ஆனில் இருந்து 33 அறிவுரைகள்

1,பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,
அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)
களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்
அழகானதைப் பேசுங்கள் 2:83

2,நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப்
பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.2:42

3,உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின்
பொருளைத் தவறான முறையில்
சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள்
அறிந்து கொண்டே பிற மக்களின்
பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும்,
அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம்
(இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.2:188

4,நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்
முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை-
நேசிக்கின்றான்.2:196

5,எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்”
என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல
பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும்,
அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய
உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
மிஸ்கீன்(ஏழை)களுக்கும்,
வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும்
நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும்
நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க
கூலி தருபவனாக) இருக்கிறான்.”2:215

6,நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்;
ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக
இருக்கும்; ஒரு பொருளை நீங்கள்
விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத்
தீமை பயப்பதாக இருக்கும்.2:216

7,கனிவான இனிய சொற்களும்,
மன்னித்தலும்; தர்மம் செய்தபின்
தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட
மேலானவையாகும்;2:263

8.மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன்
பொருளைச் செலவழிப்பவனைப்போல்,
கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும்,
நோவினைகள் செய்தும் உங்கள்
ஸதக்காவை (தான தர்மங்களைப்)
பாழாக்கி விடாதீர்கள்;2:264

9,.தான தர்மங்களை நீங்கள்
வெளிப்படையாகச் செய்தால் அதுவும்
நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப்
பிறரையும் அது தூண்டும்;) எனினும்
அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச்
செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது;2:271

10,வறுமைக்குப் பயந்து உங்கள்
குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில்
உங்களுக்கும், அவர்களுக்கும்
நாமே உணவளிக்கின்றோம்.6:151

11,நீங்கள் பேசும்பொழுது அதனால்
பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக
இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்;6:152

12,ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர்
ஆத்மா சுமக்காது. 6:164

13,அல்லாஹ் கூறுகின்றான்;
இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீ­
ர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன்
ஒரே நாயன்தான்! 16:51

14,உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண்
விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்
அளவு கடந்து (வீண்) விரயம்
செய்பவர்களை நேசிப்பதில்லை.7:31

15,தாய் தந்தையர்க்கும், நெருங்கிய
உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள
உறவினர்களுக்கும், அருகிலுள்ள
அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில்
போன்றவற்றில்) கூட்டாளிகளாக
இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும்,
உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன்
உபகாரம் செய்யுங்கள்4;36

16,யார் உலோபத்தனம்
செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்)
நிச்சயமாக எண்ண வேண்டாம் -
அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்;3;180

17,“உன் நடையில் (மிக வேகமோ, அதிக
சாவதானமோ இல்லாமல்)
நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும்
தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம்
வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின்
குரலேயாகும்.31:19

18,நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்;அது மானக்கேடானதாகும்.17:32

19,நீங்கள் (தானியங்களை) அளந்தால் அளவைப்பூர்த்தியாக அளங்கள்:இன்னும்,சரியான தராசைக்கொண்டு நிறுத்துக்கொடுங்கள். 17:35

20,பிறர் குறைகளைத்துருவித்துருவி ஆராயாதீர்கள். 49:12

21, சந்தேகமான பல எண்ணங்களில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.ஏனெனில்,எண்ணங்களில் சில பாவமாகும்.49:12

22,குழப்பம் செய்வது கொலையை விடக்கொடியது.2:217

23,தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக்கொண்டு வந்தால் அதைத்தீர்க்க விசாரித்துக்கொள்ளுங்கள்.இல்லையெனில்,அறியாமையினால் குற்றமற்ற ஒரு கூட்டத்துக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்.49:6

24,பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால் அவர்களை நோக்கி "ச்சீ" என்றும் சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் விரட்ட வேண்டாம்அவ்விருவரிடம் கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும்,இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! 17:23,24

25,பெற்றோர்களோ நெருங்கிய உறவினர்களோ,விட்டுச்சென்ற சொத்துகளில் ஆண்களுக்கும் பங்கு உண்டு;பெண்களுக்கும் பங்கு உண்டு.4:7

26,எவர் ஒரு மனிதரைக்கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார்.எவர் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைத்தவர் போலாவார்.5:32

27,நீர் அநாதையைக்கடிந்து கொள்ளாதீர்
யாசிப்பவரை விரட்டாதீர்.93:9,10

28,குறை சொல்லிப்புறம் பேசித்திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.104:1

29,உங்களில் ஒரு சமூகத்தார் மற்றொருவரைக்கேலி செய்ய வேண்டாம்.ஒருவரையொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.49:11

30,சபைகளில் நகர்ந்து இடம் கொடுங்கள் என்று உங்களுக்குச்சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான்.58:11

31,எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அதை ஒரு நிரபராதி மீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துகொள்கிறான். 4:112

32,அவர்கள் இந்தக்குர் ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டுவிட்டனவா?47:24

33,எவருக்கு நல்ல இதயம் இருக்கிறதோ,அல்லது எவர் ஓர்மையுடன் செவி தாழ்த்திக்கேட்கிறாரோ,அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தல்(படிப்பினை)இருக்கிறது.50:37