Sunday, October 27, 2013

தண்ணீர் சிக்கனம்

சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் அத்தியாவசியச்சொத்து தண்ணீரும்,காற்றுமே...

சாப்பாடு இல்லாமல் 3 நாட்கள் வரை வாழும் மனிதன் காற்று இல்லாமல் 5 நிமிடத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.
சுத்தமான காற்றும்,தண்ணீரும் வேண்டும் என்றால் மரம் வளர்க்க வேண்டும்.
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏரி அல்லது குளம் அல்லது அட்லீஸ்ட் சுயநலத்திற்காகவாவது நம் வீட்டிற்கு மட்டும் சேமிப்போம்.

நமக்கு பிறகு நம் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் அமைத்து,தண்ணீரை சிக்கனமாக சேமிக்க பழகிக்கொள்வோம்...

மணிக்கணக்கில் பாத்ரூமிலும்,டாய்லட்டிலும் நேரத்தையும்,தண்ணீரையும் வீணடிக்காமல் சேமிப்போம்

http://www.youtube.com/watch?v=IZNTnxhoU1k
http://www.youtube.com/watch?v=9Odg7Twlq1I
http://www.youtube.com/watch?v=u0ghut49oog

இது பருவ மழை நேரம்...இந்நேரத்தில் புத்திசாலித்தனமாய் ஒரு மரமாவது நட்டு மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் அறிவாளியாக இருக்க முயற்சி செய்வோம்.





இல்லையென்றால் இதே நிலைதான் நமக்கும்

Friday, October 25, 2013

சீட்லெஸ் பழங்கள் ???

                                                ஹை பிரிட் சப்போட்டோ


                                                   சீட்லெஸ் திராட்சை


                                 
   
                                                   சீட்லெஸ் நாவல்பழம்


                                                   
                                               
                                                    சீட்லெஸ் மாதுளை
                                                   
                                               
                                                     

                                                     சீட்லெஸ் பப்பாளி

                                                       

மிகக்குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் காண துடிக்கும் பேராசை விவசாயிகளின்  ஊனமுற்ற குறைமாத குழந்தைகள்
போன்றவை தான் இவை ...

ஹைபிரிட் தக்காளீ,ஹைபிரிட் வெங்காயம்,ஹைபிரிட் எலுமிச்சை என எங்கெங்கு காணினும் ஹைபிரிட்டும்,சீட்லெஸ்ஸும் தான் ...

                                                     
விதையில்லா பழங்கள் விளைவிக்கும் முயற்சி பசுமைப்புரட்சிக்கு
பிறகு ஏற்பட்டது...மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

நாவல்பழம்,இலந்தைப்பழம்,ஈச்சம்பழம் எல்லாம் விரும்பி சாப்பிட்ட மக்கள் ஆப்பிள்,ஆரஞ்சு  மட்டுமே உயர்ந்த பழ வகைகள் என தற்போது கருதுகிறார்கள்.

முன்னாடி ஸ்கூல் அருகில் இம்மாதிரியான பழங்கள் விற்கும்.....
இப்ப ஸ்கூல் அருகில் உள்ள கடைகளில் சரம் சரமாக கண்ட கழிய எண்ணெய்களில் இருந்து பொறிக்கப்பட்ட சிப்ஸுகள் தான் கலர் கலரான பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது...

விதைகளையும்,கொட்டைகளையும் நாம் சிறு வயதில் அறியாமல் பழங்களோடு விழுங்கும்போதும்,பறவைகளின் கழிவுகளின் மூலமும் விதை பரவலாக்கம் நடைபெற்றது.

ஆனால்,விதையே இல்லாத பழங்களின் மூலம் விதை பரவலாக்கலை தடுக்கும் திட்டம் திட்டமிட்டு பரப்பபட்டது...இயற்கை மற்றும் நாட்டு வைத்தியம் எல்லாம் மூடத்தனம் என்ற பெயரில் இயற்கையாக நம் ஊரிலேயே கிடைக்கும் பழங்களை,தானியங்களை சாப்பிடுவது பத்தாம்பசலித்தனமாக காட்டப்பட்டு...நமக்கும் சற்றுப்பொருந்தி வராத குளிர்பிரதேச பழங்கள்,தானியங்கள் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என ஆங்கில மருத்துவர்களால் பாடம் கற்பிக்கப்பட்டது.

சீட்லெஸ் பழங்களை உண்ணும் நாம் எதை வைத்து மரத்தை நடுவோம்???
நம் சந்ததிகளுக்கு வெற்று பூமியை விட்டுச்செல்லப்போகிறோமா..???
புறக்கணிப்போம்....சீட்லெஸ் பழங்களை....!!!
ஆதரிப்போம் இயற்கை விவசாயத்தை...!!!

உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;
குர் ஆன் 2:195

நிச்சயமாக இறைவன்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்;

குர் ஆன் 6:95

Monday, October 14, 2013

தியாகத்திருநாள்......என்ன படிப்பினை பெற்றோம்....???

குர்பானி கொடுத்து இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு 
கூறும் நன்னாள்...

எத்தனையோ தியாகத்திருநாளை நாம் கடந்தாலும்,தினமும் இப்ராஹீம் நபியின் அருளும்,பரக்கத் வேண்டி பிரார்த்தனை செய்தும் இன்னும் நம்மிடம் அற்ப குணங்களான பிடிவாதமும்,முன் கோபமும் நம்மை பிடித்துக்கொண்டு விடாமலே இருக்கிறது.
                                             

இப்ராஹீம் நபியிடமும்,அவருடைய மனைவியிடமும்,அவருடைய பிள்ளையிடமும் எவ்வளவு அழகிய முன்மாதிரி உள்ளது.....

பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் எப்படி ஒரு முன்மாதிரிக்குடும்பத்தை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்......!!! சுபுஹானல்லாஹ்...

நம்மில் எத்தனை பேர் முன்மாதிரி முஸ்லிம் குடும்பமான இப்ராஹீம் அலை அவர்களின் குடும்பத்தைப்பற்றி நம் இல்லங்களில் பேசியிருப்போம்...விவரித்திருப்போம்...

தந்தையின் தியாகம் எப்படிப்பட்டது....

தாயாரின் தியாகம் எப்படிப்பட்டது...

பிள்ளையின் பொறுமையும்,தியாகமும் எப்படிப்பட்டது......

நம் வீடுகளிலே அதிகம் பேசப்பட வேண்டிய அழகிய முன்மாதிரிகள்...

ஒரு இஸ்லாமியக்குடும்பம் செய்த தியாகம் இந்நன்னாளில் நினைவு கூறப்பட்டு நம்மிடையே அத்தியாகச்செயல் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.....

நம்முடைய தவறுகள்,பிழைகள் களையப்பட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்ள உறுதிமொழி எடுக்க வேண்டும்

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.9:114

ஒவ்வொரு இல்லத்தின் அங்கத்தினரும் பொறுமையையும்,இரக்க குணத்தையும் இந்நன்னாளில் அதிகமாக வளர்த்துக்கொள்வோம்...

திடல் தொழுகையில் குடும்பத்தோடு பங்கேற்று பெருநாள் உரையை கேட்டு 
நம்மிடையே இரக்க குணமும்,பொறுமையும் அதிகமாக இறைவனிடம் துஆ செய்வோம்...

பெண்கள் பெருநாள் அன்று காலை சமையலை எளிமையாக செய்துவிட்டு பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள ஆர்வமாக செல்லுங்கள்...வீட்டிலோ,பெண்கள் சேர்ந்து தொழுவதை தவிர்த்துவிட்டு திடலில் தொழுது நபிவழியை உயிர்ப்பிக்கவும்...

தயவு செய்து அடுப்பங்கரையில் குடி இருக்காமல் பெருநாள் உரையை கேட்டு பயனடையவும்....
________________________________________________________________________________
திடல் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள்...

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும்

 “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

Saturday, October 12, 2013

சிந்திப்போரின் சிந்தனைக்கு....!!!

நீ மனிதனை இகழ்ந்து வாழாதே...!!!
    இறைவனைப் புகழ்ந்து வாழ்...!!!

நீ வல்லவனாக வாழ்வதை விட...
    நல்லவனாக வாழ்...!!!

நீ குடித்து வாழாதே...!!!
    குடும்பத்தை மகிழ்வித்து வாழ்..!!!

நீ திருடுபவனாக வாழாதே..!!!
    திருத்துபவனாக வாழ்...!!!

நீ பிறர் பொருளை எடுத்து வாழாதே...!!!
    பிறருக்கு பொருளை கொடுத்து வாழ்...!!!

நீ பிறர் உன்னிடம் திருடுவதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரிடம் திருடாதே...!!!

நீ பிறர் உன்னை அடிப்பதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை அடிக்காதே...!!!

நீ பிறரை கொல்லாதே...!!!
    பிறரால் கொல்லப்படுவாய்...!!!

நீ பிறர் உன்னை கொலை செய்வதை விரும்ப மாட்டாய்...!!!
    பிறரை கொலை செய்யாதே...!!!

நீ உன் மனைவி,மகள்,சகோதரி கற்பை இழந்துவிடுவதைவிரும்ப மாட்டாய்..!!!
     பிறர் மனைவி,மகள்,சகோதரியின் கற்பை இழக்கச் செய்து விடாதே...!!!


                                      

இறைவன் கூறுகின்றான்....

நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக்கொலை செய்கிறாரோ,அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் அவர் கொலை செய்தவர் போன்றவராவார்.மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
குர் ஆன் 5;32

எவனொருவன் , ஒரு நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். இறைவன் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும்  தயாரித்திருக்கிறான்.குர் ஆன் 4:93

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.குர் ஆன் 3:185

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா??? குர் ஆன் 47:24

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...


நீங்கள் மண்ணில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள்.
விண்ணில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
நூல்:அபூதாவூத்

தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவர் அவருக்கு வாழ்வு அளித்தவர் போலாவார்.
நூல்:இப்னுமாஜா

ஒருவர் தமக்கு எது கிடைக்க வேண்டும் என விரும்புவாரோ அதையே அவர் மக்களுக்கு விரும்பட்டும்.
நூல்:முஸ்லிம்.

தொகுப்பு:A.அமீர்