Wednesday, May 29, 2013

கின்னஸ் வேதனை

கின்னஸ் சாதனை என்ற பெயரில் உடலை  வருத்திக்  கொள்ளும் ,
உயிரை  போக்கும் மனிதர்கள் தான் இவர்கள் ..............

இறைவன் கொடுத்த உயிர் எவ்வளவு உன்னதமானது ............உயர்வானது........
அவன் நமக்கு கொடுத்த இந்த உடலோ மிக அழகானது ........அற்புதமானது........
இறைவன் நமக்கு கொடுத்த அறிவோ அபாரமானது....
ஆனால்,பேருக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு  அறிவை அடகு வைக்கும் 
இத்தகைய செயலால் என்ன லாபம் ??

கின்னஸ்  சான்றிதழ்  உயிரோடு இருக்கும்வரை பத்திரமாக பாதுகாத்து வைப்பர் .....இறப்பிற்கு பின் அதனால்  என்ன பிரயோஜனம் ............

உயிரை வருத்தி சாதனை செய்கிறேன் என்ற பெயரில் 
மிக நீளமாக நகம் வளர்ப்பது .........
உடம்பில் ஊசியால் துளையிடுவது ..........
வாய்க்குள் நூற்றுக்கணக்கான ஸ்ட்ராக்களை திணிப்பது ...
முடியால் லாரியை இழுப்பது .........
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .......... 
அப்படிப்பட்ட ஒரு அறிவு வாளிதான் இவர் .........

உலக கின்னஸ் சாதனைக்காக தலைமுடியில் தொங்கியபடி ஆற்றின் குறுக்கே கயிறு மூலமாக கடக்க முயன்றவர் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைலேந்திர ராய்(45) என்பவர் வித்தியாசமாக எதையாவது செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். சிறந்த சுற்றுலா தலமான டார்ஜிலிங்கில் உள்ள மலைப்பாதை ரயிலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமுடியால் இழுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
மேலும் நேற்று சிலிகுரி அருகே தீஸ்தா ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதில் தலைமுடியில் தொங்கியபடி ஆற்றை கடக்க முயன்றார். இவரது சாதனை முயற்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் கயிறு கட்டப்பட்டது.
கயிற்றின் மீது கிணறுகளில் நீர் எடுக்க பயன்படும் சகடை சக்கரத்தை கட்டி அதில் தனது முடியை கட்டிக் கொண்டார். சக்கரத்தை தனது உடல் அசைவால் நகர்த்தி ஆற்றை கடக்க முயன்றார். பாதி தூரம் சென்றதும் ராட்டினம் கயிற்றில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் அது நகரவில்லை.
ராய் எவ்வளவு முயற்சித்தும் சிக்கலில் இருந்து விடுபடவில்லை. கரையில் இருந்த மக்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. யாராலும் உதவ முடியவில்லை.
சிறிது நேரம் சென்றதும் ராயின் கை கால் அசைவுகள் திடீரென நின்றது. விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த மக்கள் கயிறை பிடித்து கரைக்கு இழுத்தனர். ராய் மூர்ச்சையற்று கிடந்தார். அவரை சோதித்த டொக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வேடிக்கை பார்க்க வந்த மக்கள், ரசிகர்கள், கின்னஸ் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் சாதனையாளர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                        

ஒரு மரம் வைத்தாலாவது  வாழும் போதும்,
மரணத்திற்கு பின்னும் மக்கள் பயனடைவர்....


ஆனால்,நீண்ட நகம் 
வளர்ப்பதால் குடும்பத்திற்கு சிரமம் ......
முகத்தையோ,உடம்பையோ வருத்தி செய்யும் இவை சாதனை அல்ல.
அதை வைத்து ஒரு பயனும் இல்லை .........


சாதனை என்பது தம் சுற்றத்தார் பயனடையும் படி வாழ்ந்து தம் சமூகத்தை முன்னேற்றும் செயலே ஆகும் ........... 

Saturday, May 11, 2013

அழகிய உபதேசம்

அழகானதையே பேசுங்கள்....

நன்மையான விசயத்தில் உதவிக்கொள்ளுங்கள்.........

அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்.....

மக்களிடையே நல்லிணக்கத்தையே ஏற்படுத்துங்கள்........

சமாதானம் செய்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்...

பெற்றோருக்கு பணி விடை செய்யுங்கள்
                                

அநாதைகளை ஆதரியுங்கள்.....

கூச்சலிடாதீர்கள்.

உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள்...

ஏழைகளுக்கு உணவளியுங்கள்....
             
   

                                       

பிறர் தரும் தொல்லைகளை பொறுத்துக்கொள்ளுங்கள்....

உள்ளதை கொண்டு திருப்தி அடையுங்கள்.......

தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புதல்.....

தம்மை விட பிறரைக்கவனியுங்கள்............

தீய பேச்சை தவிர்த்துக்கொள்ளுங்கள்........

நன்மையான விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்....

பட்டப்பெயர் சூட்டாதீர்கள்..........

துருவி துருவி விசாரிக்காதீர்கள்.........

சந்தேகப்படாதீர்கள்.....

வாக்குறுதி தவறாதீர்கள்............

பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்........

உண்ணுங்கள்,பருகுங்கள்,வீண் விரயம் செய்யாதீர்கள்...


கஞ்சத்தனம் செய்யாதீர்கள்........

பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நற்காரியம் செய்யாதீர்கள்.........


இதுவே அல்குர் ஆன் சொல்லும் அழகிய வாழ்க்கை முறை......

அல்குர் ஆனை தமிழில் படிக்க,இலவசமாக பெற்றுக்கொள்ள 

எம்மை தொடர்பு கொள்ளவும்.......

Wednesday, May 8, 2013

தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் அது தோல்வியாகிவிடுமா???

பள்ளிகளில் +2  தேர்வு முடிவு வந்துள்ள சூழ்நிலையில் மாநில அளவில் மதிப்பெண் பெறும் மாணவர்களை இன்னும் சில நாட்களுக்கு
அனைத்து ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்....

ஆனால்.......அதற்கு மறுநாளில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் என நாளிதழில் வரும்போது மிக மிக
வேதனையாக இருக்கும்........



தொலை தொடர்பு மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் 10,+2 மாணவர்களுக்கு
வாழ்ந்து காட்டுவோம்,ஜெயித்துக்காட்டுவோம் என பயிற்சி அரங்குகள் அடிக்கடி நடத்தும்போது குறைவான மதிப்பெண் எடுக்கும் நிலையில் உள்ள  மாணவர்களுக்கும்  ஊக்கப்படுத்தும் விதமாக பேசலாம்...

கணிதப்பாடத்தில் தோல்வி.....
10 ம் வகுப்பு மாணவி தற்கொலை....

தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 10 ம் வகுப்பு மாணவர்
தற்கொலை முயற்சி...

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி....
மாணவி வீட்டை விட்டு ஓட்டம்.....

+2 தேர்வில் தோல்வி......
விரக்தியில் மாணவன் தற்கொலை....

பி.எட் படித்த மாணவர் தேர்வில் தோல்வியால் தற்கொலை....

10 ம் வகுப்பு  மாணவர் தேர்வில் தோல்வி.......
விஷமருந்தி மாணவன் தற்கொலை........

தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு
முயன்ற 3 மருத்துவ மாணவர்கள் .......

10ம் வகுப்பு தோல்வி சென்னை மாணவிகள் 2 பேர் தற்கொலை....

தற்கொலை செய்வதில் 10 வகுப்பு மாணவரில் இருந்து மருத்துவம்,பி.எட் படிக்கும் மாணவர்கள் வரை விதி விலக்கே இல்லை........

படிப்பு மட்டுமே உலகம் என நினைத்து கொண்டு படிக்கும்
மாணவர்களை அதிக அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்  ..........
மாணவர்களை மார்க் எடுக்கும் மிஷின்களாக தயவு செய்து கருதாதீர்கள்.......

அதில் மதிப்பெண்கள் மட்டுமே வெற்றி....!!!குறைவாக எடுக்கும் நிலையை அடைந்தால அதை தயவு செய்து தோல்வி என கூறாதீர்கள்.......

பள்ளிகளும்,கல்லூரிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அறிவாளி.அதிக மதிப்பெண்கள் மட்டுமே  வாழ்வில் முன்னேற முடியும் என மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மனப்பாடம் செய்யும் மாணவ சமுதாயத்தையே உருவாக்குகின்றனர்.....

இது மட்டுமல்லாமல்,தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுபவர்
மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் அடைவார் எனவும்......

மதிப்பெண் குறைவாக எடுத்தவரை அறிவுக்குறைவற்றவர்களாகவும்,
வாழத்தகுதியற்றவர்களாகவும் ஒரு போலியான மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சமூகத்தில் மாணவர்களிடம் அவர்கள் பெற்றோரும்,ஆசிரியர்களும் மதிப்பெண்ணை மட்டும் எதிர்பார்த்து அவர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் போவதாலே இத்தகைய செயல்கள் நடைபெறுகிறது........

குறிப்பாக ஆசிரியர்கள் நன்றாக மனனம் செய்யும் மாணவர்களிடம் மட்டும் அக்கறையாக பேசுவதும்,மனன குறைபாடு உள்ளவர்களிடம் நீ எதற்கும் லாயக்கற்றவன் என்ற ரீதியில்  பேசுவது மிக தவறு என உணர வேண்டும்.....

இன்னும் பெற்றோர்கள் கல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே....அதுவே வாழ்க்கை அல்ல என புரிந்து கொள்ள வேண்டும்....


உங்கள் பிள்ளைகள் தேர்வில் குறைவான மதிப்பெண்களோடு தேர்வு பெற்றிருந்தாலும் அதை மற்றவர்கள் முன் மட்டம் தட்டி பேசாதீர்.......

தனிமையிலும் தயவு செய்து எரிந்து விழாதீர்கள்.....

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள் மறு தேர்வின் மூலம் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என உற்சாகமூட்டி சுற்று வட்டாரத்தில் தேர்வில் தோல்வியடைந்த எத்தனை பேர் வாழ்வில் வெற்றிக்கனி பறித்தார்கள் என உதாரணம் கூறலாம்........

எழுத்தாளர் சுஜாதா.....ஒரு கட்டுரையில் கூறியிருந்தார்........

பல வருடங்களுக்கு பிறகு தன்னுடன் படித்த மாணவர்களை பார்க்கும்போது..............

கிளாஸ் ஃபர்ஸ்டாக வந்த மாணவர்  உள்ளூரில் கவர்மெண்ட் ஆஃபிஸில் குமாஸ்தாவாக வேலை பார்த்தாராம்

சுஜாதா சுமாராக படிக்கும் மாணவராம்.....அவர் பெல்லில் மிக உயரிய பணியில் இருந்தாராம்.....

ஆனால்,அடிக்கடி தோல்வி அடைந்து மிக மோசமாக படிக்கும் மாணவன் ஒருவன் ஐ.நா சபையில் வேலை பார்க்கிறாராம்....

இன்னும் ஏன்....உலக பணக்காரர் பில்கேட்ஸ்
கல்லூரிக்கல்வியை நிறைவு செய்யவில்லை ...........
ஆனால்,அவர் வாழ்வில் அடைந்த இலக்கோ மிக பெரியது.........

சோர்வடையாமல் மீண்டும் முயற்சியுங்கள்....
சோர்வடையாதவன் கண்டிப்பாக வெற்றியடைவான்....